கொண்டாட்டம்
கபாலி - ஏர் ஏசியா விமானம் கபாலி படத்தின் ஸ்டில்களுடன் பறக்கிறது. ஒரு தனியார் நிறுவனம் கபாலி ரிலீஸாகும் தேதியில் விடுமுறை அளித்திருக்கிறது. ஐரோப்பா முதலான பல நாடுகளில் முதன் முறையாக ஒரு தமிழ் படம் ரிலீஸாகிறது.
இப்படி கபாலி படத்திற்கான ஹைப் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. ஆனால்..................................
சுற்றுப்புறச்சூழல், மரம் வளர்த்தல், நீர் ஆதாரங்களை பாதுகாத்தல், சுத்தம் என்பன போன்றவைகளுக்கு கூட வேண்டிய கூட்டம் பொழுதுபோக்கு ஒன்றிற்கு கூடுவதை ரசிக்க முடியவில்லை. சென்ற தலைமுறை, தனக்கு அடுத்த தலைமுறைக்கு வாழ, வளர பூமியை, அதன் ஆதார இயற்கை வளங்களோடு தந்தார்கள். நாம் நமது அடுத்த தலைமுறைக்கு என்ன மிச்சம் வைக்க இருக்கிறோம்?
எத்தனையோ நடிகர் நடிகையர்கள் தங்களது திறமையை உழைப்பை காட்டும் சினிமா துறையில், அறுபதை கடந்த மனிதர் இன்னமும் நம்பர் 1 ஆக இருக்கிறார். இது சொல்ல வருவது என்ன? இள ரத்தங்களில் குறையா? அல்லது முதிய ரத்தம் அத்தனை வீரியமாக இருக்கிறதா? ஒரு காலத்தில் இப்படி ஒரு கூட்டம் ஒருவருக்காக கூடியது. அவர் 17 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழகத்தை ஆண்டார். இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் அப்படி ஒருவரை நாம் கண்டடைய முடியுமா? இது சொல்ல வரும் செய்தி என்ன?
ஒரு சினிமா உருவாக ஆயிரம் பேரின் உழைப்பு தேவைப்படுகிறதுதான். ஆனால் ஆயிரம் பேரின் உழைப்பை, திறமையை அங்கீகரிக்க வேண்டிய அந்த ஒரே காரணத்திற்காய் அதன் பின்னே ஒளிந்திருக்கும் ஓட்டைகளை கண்டுகொள்ளாமல் போகத்தான் வேண்டுமா? கபாலி குறித்து கேள்விப்படுகையில் வானியல், ஜோதிடம், பிறந்த நேரம், அதிர்ஷ்டம் போன்றவைகள் மேல் தீவிர நம்பிக்கை உருவாகிவிடுவதை தவிர்க்கவே முடிவதில்லை. இந்த ஒரு விஷயம், படித்தவர்களையும் படிக்காதவர்களையும் ஒரே விதமாகத்தான் இயங்க வைக்கிறது எனும்போது, கல்வி என்பதன் உண்மையான நோக்கம் என்ன என்பதன் மீது தீவிரமாக யோசனை வந்துவிடுகிறது.
சுவாதி கொலை வழக்கு, மர்மமான முறையில் மரணித்த ஐ.பி.எஸ் அதிகாரி சசி மற்றும் மருத்துவ மாணவர் சரவணன், பியுஷ் மனுஷ் விவகாரம் உள்பட பல்வேறு சமூக பிரச்சனைகளை கொஞ்ச கொஞ்சமாக மறக்கவும், தீவிரம் குறைக்கவும் இது பயன்படப்போகிறது.
நூறாண்டுகால இந்திய சினிமாவில் பிரிட்டனின் ஹால் ஆஃப் ஃபேமில் இருக்கும் ஒரே இந்தியர் சத்யஜித்ரே. ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருது பெறும் நான்காவது இந்தியர். இத்தனைக்கும் ஆண்டுக்கு இரு நூறு படங்களுக்கு மேல் தமிழ் சினிமா மட்டும் உற்பத்தி செய்கிறது. ஹைப், டாக் ஆஃப் த டவுன் , கொண்டாட்டமான வெளியீடு எல்லாம் ஓகே தான். வெற்றிக்களிப்பில் கொண்டாடலாம். என்ன வென்றோம்? எப்படி வென்றோம்? எங்கே வென்றோம்? நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரியின் மர்ம மரணம் என்ன விதமான வெற்றி? பியுஷ் மனுஷ் என்கிற மனிதனின் இயற்கை மீதான காதலை சட்டத்தின் போலி கைகளால் நாற்பது முதலாளிகளும், நான்கு அரசியல்வாதிகளும் குற்றுயிராக கிழித்துப்போடுவது என்ன விதமான வெற்றி? என்ன உழைத்தோம்? எந்த களைப்பை போக்க இந்த கொண்டாட்டம்?
எட்டு மாதங்கள் முன்பு பெருவெள்ளத்திலிருந்து மீண்ட ஒரு பெரு நகரத்தின் அடையாளம் துளி கூட இல்லை இந்த கொண்டாட்டத்தில். ஏரிகளை தூர் வார, நதிகளை ஒருங்கிணைக்க, நீர் ஆதாரம் கூட்ட என பெறும் நிதி தேவைப்படும் சூழலில், இந்த கொண்டாட்டம். ஏழு கோடி ஜனம். தலைக்கு நூறு ரூபாய். எழு நூறு கோடி. ஏரி, குளம் குட்டை, ஆறுகளை தூர் வாரி நீராதாரம் பெறுக்கினால், வர இருக்கும் மழைக்காலத்தில் நீர் சேமிக்கலாம். விவசாயத்திற்கு உதவும். முதல் நாள் முதல் ஷோவுக்கு டிக்கெட் ஆயிரம் ரூபாய் என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்கள்.
வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்.
ஜெய் ஹிந்த்.
ஜெய் ஹிந்த்.
ஜெய் ஹிந்த்.
கபாலி - ஏர் ஏசியா விமானம் கபாலி படத்தின் ஸ்டில்களுடன் பறக்கிறது. ஒரு தனியார் நிறுவனம் கபாலி ரிலீஸாகும் தேதியில் விடுமுறை அளித்திருக்கிறது. ஐரோப்பா முதலான பல நாடுகளில் முதன் முறையாக ஒரு தமிழ் படம் ரிலீஸாகிறது.
இப்படி கபாலி படத்திற்கான ஹைப் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. ஆனால்..................................
சுற்றுப்புறச்சூழல், மரம் வளர்த்தல், நீர் ஆதாரங்களை பாதுகாத்தல், சுத்தம் என்பன போன்றவைகளுக்கு கூட வேண்டிய கூட்டம் பொழுதுபோக்கு ஒன்றிற்கு கூடுவதை ரசிக்க முடியவில்லை. சென்ற தலைமுறை, தனக்கு அடுத்த தலைமுறைக்கு வாழ, வளர பூமியை, அதன் ஆதார இயற்கை வளங்களோடு தந்தார்கள். நாம் நமது அடுத்த தலைமுறைக்கு என்ன மிச்சம் வைக்க இருக்கிறோம்?
எத்தனையோ நடிகர் நடிகையர்கள் தங்களது திறமையை உழைப்பை காட்டும் சினிமா துறையில், அறுபதை கடந்த மனிதர் இன்னமும் நம்பர் 1 ஆக இருக்கிறார். இது சொல்ல வருவது என்ன? இள ரத்தங்களில் குறையா? அல்லது முதிய ரத்தம் அத்தனை வீரியமாக இருக்கிறதா? ஒரு காலத்தில் இப்படி ஒரு கூட்டம் ஒருவருக்காக கூடியது. அவர் 17 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழகத்தை ஆண்டார். இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் அப்படி ஒருவரை நாம் கண்டடைய முடியுமா? இது சொல்ல வரும் செய்தி என்ன?
ஒரு சினிமா உருவாக ஆயிரம் பேரின் உழைப்பு தேவைப்படுகிறதுதான். ஆனால் ஆயிரம் பேரின் உழைப்பை, திறமையை அங்கீகரிக்க வேண்டிய அந்த ஒரே காரணத்திற்காய் அதன் பின்னே ஒளிந்திருக்கும் ஓட்டைகளை கண்டுகொள்ளாமல் போகத்தான் வேண்டுமா? கபாலி குறித்து கேள்விப்படுகையில் வானியல், ஜோதிடம், பிறந்த நேரம், அதிர்ஷ்டம் போன்றவைகள் மேல் தீவிர நம்பிக்கை உருவாகிவிடுவதை தவிர்க்கவே முடிவதில்லை. இந்த ஒரு விஷயம், படித்தவர்களையும் படிக்காதவர்களையும் ஒரே விதமாகத்தான் இயங்க வைக்கிறது எனும்போது, கல்வி என்பதன் உண்மையான நோக்கம் என்ன என்பதன் மீது தீவிரமாக யோசனை வந்துவிடுகிறது.
சுவாதி கொலை வழக்கு, மர்மமான முறையில் மரணித்த ஐ.பி.எஸ் அதிகாரி சசி மற்றும் மருத்துவ மாணவர் சரவணன், பியுஷ் மனுஷ் விவகாரம் உள்பட பல்வேறு சமூக பிரச்சனைகளை கொஞ்ச கொஞ்சமாக மறக்கவும், தீவிரம் குறைக்கவும் இது பயன்படப்போகிறது.
நூறாண்டுகால இந்திய சினிமாவில் பிரிட்டனின் ஹால் ஆஃப் ஃபேமில் இருக்கும் ஒரே இந்தியர் சத்யஜித்ரே. ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருது பெறும் நான்காவது இந்தியர். இத்தனைக்கும் ஆண்டுக்கு இரு நூறு படங்களுக்கு மேல் தமிழ் சினிமா மட்டும் உற்பத்தி செய்கிறது. ஹைப், டாக் ஆஃப் த டவுன் , கொண்டாட்டமான வெளியீடு எல்லாம் ஓகே தான். வெற்றிக்களிப்பில் கொண்டாடலாம். என்ன வென்றோம்? எப்படி வென்றோம்? எங்கே வென்றோம்? நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரியின் மர்ம மரணம் என்ன விதமான வெற்றி? பியுஷ் மனுஷ் என்கிற மனிதனின் இயற்கை மீதான காதலை சட்டத்தின் போலி கைகளால் நாற்பது முதலாளிகளும், நான்கு அரசியல்வாதிகளும் குற்றுயிராக கிழித்துப்போடுவது என்ன விதமான வெற்றி? என்ன உழைத்தோம்? எந்த களைப்பை போக்க இந்த கொண்டாட்டம்?
எட்டு மாதங்கள் முன்பு பெருவெள்ளத்திலிருந்து மீண்ட ஒரு பெரு நகரத்தின் அடையாளம் துளி கூட இல்லை இந்த கொண்டாட்டத்தில். ஏரிகளை தூர் வார, நதிகளை ஒருங்கிணைக்க, நீர் ஆதாரம் கூட்ட என பெறும் நிதி தேவைப்படும் சூழலில், இந்த கொண்டாட்டம். ஏழு கோடி ஜனம். தலைக்கு நூறு ரூபாய். எழு நூறு கோடி. ஏரி, குளம் குட்டை, ஆறுகளை தூர் வாரி நீராதாரம் பெறுக்கினால், வர இருக்கும் மழைக்காலத்தில் நீர் சேமிக்கலாம். விவசாயத்திற்கு உதவும். முதல் நாள் முதல் ஷோவுக்கு டிக்கெட் ஆயிரம் ரூபாய் என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்கள்.
வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்.
ஜெய் ஹிந்த்.
ஜெய் ஹிந்த்.
ஜெய் ஹிந்த்.