கேரள நிர்பயா
கேரளாவின் ஜிஷாவை கேரள நிர்பயா என்கிறார்கள்.
ஜிஷா ஒரு தலித். லா படித்துக்கொண்டிருந்தவர். (லா என்றால் ஷகிலா அல்ல. சிவில் லா, கிரிமினல லா... அந்த லா)
அவர் வீட்டுக்கு அருகாமையில் கட்டிட வேலைக்காய் வந்த அசாமை சேர்ந்த ஒருவனால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, கல்லீரல் இருதயம் என சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு உயிரற்ற நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். வழமைபோல "ஆண் நாய்கள், ஆணாதிக்கம், பெண் சுதந்திரம்"என்கிற கோணத்தில் பிய்த்து பீராய்ந்து கொண்டிருக்கின்றன.
2012 ல் நிர்பயா கேஸ் வந்த போதே, தற்காப்புக்காக கராத்தே கற்றுக்கொள்வது, மிளகாய்ப்பொடி தூவுவது, அவசர உதவிக்கென அலைபேசி எண் என்றெல்லாம் கொண்டு வந்தார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே நிலை தான் இருக்கிறது. இந்த முறை சிக்கியிருப்பது ஒரு தலித் பெண் என்கிற தகவல் மிக முக்கியமானது என்றே நினைக்கிறேன். கேரள நிர்பயா என்கிற tagging கே கூட இவ்விஷயத்தை ஆணாதிக்கம் பெண்ணுரிமை என்கிற கோணத்தில் வழி நடத்தி போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
ஜிஷா விவகாரத்தில் வேறு சில பக்கங்களும் இருக்கின்றன. ஜிஷா ஒரு தலித் என்பதே ஒரு மிகப்பெரிய பக்கம் தான். சமூகத்தில் தலித்கள் புறக்கணிக்கப்படுவதால் வரும் பிரச்சனை என்றும் இதை கொள்ளலாம். தலித் என்று தெரிந்தால் வீடு தர மறுக்கிறார்கள். அரசு பணியில் உள்ளவர்களுக்கு அரசாங்கம் தரும் குவார்டர்ஸ் மூலமான ஒரே பொருளாதார பின்னணி, வாழ்க்கைமுறை, கல்வித்தகுதி கொண்ட சக மனிதர்களுடன் பழகக்கூடிய சுற்றுச்சூழல் தானாகவே அமைந்துவிடுகிறது. அரசு வேலை இல்லாத தலித்வகளுக்கு?
அவர்களுக்கு வீடு மறுக்கப்படுகையில், வேறு வழியில்லாமல் கிடைத்த இடத்தில் ஒண்ட வேண்டியதாகிவிடுகிறது. பொருளாதாரம், சிந்தனா முறை, கல்வி போன்ற எந்த வகையிலும் பொறுத்தமில்லாத ஒரு கூட்டத்திற்கு நடுவே வாழ்ந்தபடிதான் தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் கிட்டத்தட்ட எல்லா தலித்களுக்குமே இருக்கிறது. அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தான் அதன் கஷ்டம் புரியும். பாலியல் தொல்லைகள், குடித்துவிட்டு ரகளை செய்வது, வேண்டுமென்றே படிக்க விடாமல் செய்வது, மீறினால் மூர்க்கமாக தாக்குவது, இது போல் இன்னும் எத்தனையோ தொல்லைகளுக்கு நடுவேதான் ஒரு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவன் "இட ஒதுக்கீடு"என்கிற ஒரே ஒரு துருப்புச்சீட்டை வைத்துக்கொண்டு போராட வேண்டியிருக்கிறது. (வன்புணர்வும் கொலையும் நடந்த இடத்தை பார்த்தால் புரியும்)
மற்ற ஜாதிக்காரர்கள் ஒருவரையொருவர் அங்கீகரித்துக்கொள்கிறார்கள் என்னும்போது அவர்களுக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் இல்லை. நல்ல சுற்றுச்சூழலே முன்னேறுவதற்கான அடிப்படை தளத்தை உருவாக்கிவிடும். தலித்களுக்கு பெரும்பாலும் அந்த செளகர்யம் கிட்டவே கிட்டாது.
இந்த பின்னணியில் ஜிஷா வன் புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன். மாறாக கேரள் நிர்பயா என்று tag செய்வது விவகாரத்த்தை வேறொரு கோணத்தில் திசை திருப்பி கவனங்களை சிதறடிக்க செய்யும் என்றே தோன்றுகிறது.
கட்டிடம் கட்ட, சித்தாள் முதலான கூலி வேலைகளுக்கென தமிழகம் வரும் வெளி மாநிலத்தவர்களால் நேரும் படுகொலைகள் வரிசையில் கூட ஜிஷா கேஸை அணுக முடியும். எண்ணற்ற நிகழ்வுகளை சொல்ல முடியும் என்றாலும் பெண்களுக்கு எதிராக எனும்போது டி.சி.எஸ் பெணி மகேஸ்வரி கொலையை சொல்லலாம். இதுவும் பாதுகாப்பற்ற மாலை மங்கிய சூழலில் நேர்ந்த குற்றமே.
நடந்த சூழலை கவனித்தால் மகேஸ்வரி கொல்லப்பட்ட சூழல் அப்படியே ஒரு தலித்தின் தினசரி வாழ்க்கையை ஒத்திருக்கிறது. பொருளாதாரம், வாழ்க்கைமுறை, சிந்தனா முறை போன்ற எதிலும் பொறுந்தாத மனிதர்களை எதிர்கொள்ள நேர்கையில் பாதுகாப்பற்ற தன்மை உருவாகிவிடுகிறதுதான்.
ஒரு தலித் இப்படியான சூழலை தினம் தினம் கடக்க வேண்டி இருக்கிறது என்கிற ரிஸ்கை கணக்கில் கொண்டால் தலித்திற்கு வழங்கப்படும் 'இட ஒதுக்கீடு'மிக மிக மிக குறைந்த சலுகை என்றே நினைக்கிறேன். எல்லாவகையிலும் ஒதுக்கிவிட்டு இட ஒதுக்கீடு என்ற ஒன்றே ஒன்றால் சமன் செய்துவிட்டதாக ஒரு பக்கம் சொல்லப்படுகிறபோது, இன்னொரு பக்கம் இட ஒதுக்கீட்டை தராதே என்கிற கோஷங்களும் கேட்கின்றன.
இட ஒதுக்கீட்டை வேண்டாம் என்று சொல்பவர்கள் தங்களுக்குள், தங்களில் ஒருவராக தலித்தை அங்கீகரிப்பார்களா? அது நடக்கவே நடக்காது.
உள்குத்து செய்வார்கள் பாராமுகம் இருக்கும். புத்திசாலித்தனமாக புறக்கணிப்பார்கள். முதுகுக்கு பின்னால் பேசுவார்கள். மீண்டும் செக்கு மாடாக்க முயல்வார்கள். இளவரசன்களும், கோகுல் ராஜ்களும் தொடர்ந்து மர்மமான முறையில் கொல்லப்படுவார்கள். அப்படி கொல்லப்படுபவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று சொல்லவும் ஒரு கும்பல் எப்போதுமே தயாராக இருக்கும். இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று தான் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது அரசு.
மற்ற ஜாதிக்காரர்கள் தலித்களை புறக்கணிப்பதே இட ஒதுக்கீடு என்ற ஒன்று நிலைப்பதற்கு காரணம் என்றே நினைக்கிறேன். இட ஒதுக்கீடு நீக்கப்படவேண்டுமானால், தலித்கள் ஒரு சமூகத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும். இரண்டில் ஒன்று தான் நடக்கும் என்றால் அது எது என்பதைத்தான் நாம் முடிவு செய்ய வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரை அங்கீகாரம் கிடைக்காது என்கிற அடிப்படையிலிருந்து தான் இடஒதுக்கீடு பிறக்கிறது.
இக்காலங்களில் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கோஷம் போடுபவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு சதம், இடஒதுக்கீடால் பொறியியல் மருத்துவ கல்லூரிகளிலும், ஐடி கம்பெனிகளிலும் தனக்கு அருகாமையில் அமரும் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலான தலித்களை பார்த்துத்தான் கோஷம் போடுபவர்களாக இருக்கிறார்கள்.
உண்மையில் இட ஒதுக்கீடால் இப்படி தினம் தினம் பொறுத்தமில்லாத சூழலிலிருந்து விடுபட்டு, தனக்கும் தன் அறிவுக்கும், கல்வித்தகுதிக்கும் பொருளாதாரத்திற்கும் பொறுத்தமான இடங்களை சென்றடைவதின் மூலம் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் தலித்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு தான். இவர்களுக்கு தலித்களின் உண்மையான பிரச்சனைகளான சுற்றுச்சுழலில் பொருளாதாரம், கல்வி போன்ற விஷயங்களில் பொறுத்தமில்லாமை, சரியாக வழி நடத்தக்கூடிய நபர்கள் குடும்பத்தில் இல்லாமை போன்ற எண்ணற்ற காரணங்கள் குறித்து எவ்வித புரிதலும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பது "தலித்களின் உண்மையான பிரச்சனைகள் என்ன?"என்று கேள்வி கேட்பதம் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம். உடைந்த டேப் ரெக்கார்டர் போல, "இடஒதுக்கீடால் தூங்கி தூங்கியே மேல வந்துட்டான்"என்பதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். எவ்வித புரிதலும் இல்லாதவர்கள் இவர்கள் என்பதை.
இந்த ஜிஷா ஒரு வேளை கொல்லப்படாமல் இருந்திருந்தால், மரணத்தை விடவும் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேர்ந்திருக்கும். நடந்த வன்புணர்விலிருந்து மன ரீதியாக அவர் தன்னை சேகரித்துக்கொள்ள கால தாமதம் ஆகும். அதற்குள் அவரது ஆண்டுத்தேர்வுகள் கடந்து போக நேரலாம். பார்க்கப்போனால் ஒவ்வொரு தலித்திற்கும் இது போல் ஏதாவது ஒரு பேரிடர் வந்து, அதனால் அவனது கல்வியோ, அகமோ பாதிக்கப்படுகிறதுதான். இளவர்சன் மரணத்தின் போது ஒரு கிராமமே எரிக்கப்பட்டது. அந்த கிராமத்திலும் அக்கம்பக்கத்து கிராமத்திலும் எத்தனை தலித் பிள்ளைகளால் அந்த வருடம் பத்தாவது பன்னிரண்டாவது பொதுத்தேர்வு எழுத முடிந்திருக்கும்? அது அவர்களது குற்றமா? ஒவ்வொரு கிராமத்திலும் தலித் மரணித்தால் பிணத்தை ஊரைச்சுற்றித்தான் கொண்டு போக நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதை கண்முன்னே பார்க்க நேரும் ஒரு பதினைந்து வயது தலித் மீது திணிக்கப்படும் உளவியல் ரீதியிலான மனப்போக்குகள் அவனை அவனது கல்வியிலிருந்து எத்தனை தூரம் விலகிச்செல்ல வைக்கும்? அதை எதிர்த்து போராடித்தான் அவன் தன்னை நிரூபிக்க வேண்டி இருக்கிறது. இத்தனை பிரச்சனைகளை மற்ற ஜாதிக்காரர்கள் எதிர்கொள்கிறார்களா? இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இடஒதுக்கீடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
அரசாங்கம் தலித்களுக்கு மதிப்பெண்களில் சலுகை அளிப்பதற்கு பின்னால் ஒரு குறிப்பிட்ட சமூகம் அடையும் இன்னல்களின் மீதான முழுமையான புரிதல் இருக்கிறது. அந்த புரிதல் இல்லாதவர்களால் தான் அதை புரிந்துகொள்ள முடியாமல் இடஒதுக்கீடு மீது கோஷம் எழுப்ப முடிகிறது. ஏழாவது எட்டாவது தலைமுறையாக பொறியியல் மருத்துவம் படித்த படிக்கின்ற படித்து செட்டிலான மேட்டுக்குடி மக்களுக்கு கம்ப்யூட்டர் புரிகிறது, சிக்கலான பொறியியல் கணக்கு, ஸ்டேடிஸ்டிக்ஸ் , ஸ்டாக் எக்ஸ்சேன்ச் எல்லாம் புரிகிறது ஆனால் இது மட்டும் புரிய மறுப்பதுவும், புரிந்து கொள்வதையே புறக்கணிப்பதும் தான் உண்மையான உளவியல் பிரச்சனைகள் என்கிற புரிதலில் தான் யாருக்கு உண்மையிலேயே உளவியல் ரீதியிலான மருத்துவம் தேவைப்படுகிறது என்பது இருக்கிறது.
கேரளாவின் ஜிஷாவை கேரள நிர்பயா என்கிறார்கள்.
ஜிஷா ஒரு தலித். லா படித்துக்கொண்டிருந்தவர். (லா என்றால் ஷகிலா அல்ல. சிவில் லா, கிரிமினல லா... அந்த லா)
அவர் வீட்டுக்கு அருகாமையில் கட்டிட வேலைக்காய் வந்த அசாமை சேர்ந்த ஒருவனால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, கல்லீரல் இருதயம் என சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு உயிரற்ற நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். வழமைபோல "ஆண் நாய்கள், ஆணாதிக்கம், பெண் சுதந்திரம்"என்கிற கோணத்தில் பிய்த்து பீராய்ந்து கொண்டிருக்கின்றன.
2012 ல் நிர்பயா கேஸ் வந்த போதே, தற்காப்புக்காக கராத்தே கற்றுக்கொள்வது, மிளகாய்ப்பொடி தூவுவது, அவசர உதவிக்கென அலைபேசி எண் என்றெல்லாம் கொண்டு வந்தார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே நிலை தான் இருக்கிறது. இந்த முறை சிக்கியிருப்பது ஒரு தலித் பெண் என்கிற தகவல் மிக முக்கியமானது என்றே நினைக்கிறேன். கேரள நிர்பயா என்கிற tagging கே கூட இவ்விஷயத்தை ஆணாதிக்கம் பெண்ணுரிமை என்கிற கோணத்தில் வழி நடத்தி போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
ஜிஷா விவகாரத்தில் வேறு சில பக்கங்களும் இருக்கின்றன. ஜிஷா ஒரு தலித் என்பதே ஒரு மிகப்பெரிய பக்கம் தான். சமூகத்தில் தலித்கள் புறக்கணிக்கப்படுவதால் வரும் பிரச்சனை என்றும் இதை கொள்ளலாம். தலித் என்று தெரிந்தால் வீடு தர மறுக்கிறார்கள். அரசு பணியில் உள்ளவர்களுக்கு அரசாங்கம் தரும் குவார்டர்ஸ் மூலமான ஒரே பொருளாதார பின்னணி, வாழ்க்கைமுறை, கல்வித்தகுதி கொண்ட சக மனிதர்களுடன் பழகக்கூடிய சுற்றுச்சூழல் தானாகவே அமைந்துவிடுகிறது. அரசு வேலை இல்லாத தலித்வகளுக்கு?
அவர்களுக்கு வீடு மறுக்கப்படுகையில், வேறு வழியில்லாமல் கிடைத்த இடத்தில் ஒண்ட வேண்டியதாகிவிடுகிறது. பொருளாதாரம், சிந்தனா முறை, கல்வி போன்ற எந்த வகையிலும் பொறுத்தமில்லாத ஒரு கூட்டத்திற்கு நடுவே வாழ்ந்தபடிதான் தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் கிட்டத்தட்ட எல்லா தலித்களுக்குமே இருக்கிறது. அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தான் அதன் கஷ்டம் புரியும். பாலியல் தொல்லைகள், குடித்துவிட்டு ரகளை செய்வது, வேண்டுமென்றே படிக்க விடாமல் செய்வது, மீறினால் மூர்க்கமாக தாக்குவது, இது போல் இன்னும் எத்தனையோ தொல்லைகளுக்கு நடுவேதான் ஒரு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவன் "இட ஒதுக்கீடு"என்கிற ஒரே ஒரு துருப்புச்சீட்டை வைத்துக்கொண்டு போராட வேண்டியிருக்கிறது. (வன்புணர்வும் கொலையும் நடந்த இடத்தை பார்த்தால் புரியும்)
மற்ற ஜாதிக்காரர்கள் ஒருவரையொருவர் அங்கீகரித்துக்கொள்கிறார்கள் என்னும்போது அவர்களுக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் இல்லை. நல்ல சுற்றுச்சூழலே முன்னேறுவதற்கான அடிப்படை தளத்தை உருவாக்கிவிடும். தலித்களுக்கு பெரும்பாலும் அந்த செளகர்யம் கிட்டவே கிட்டாது.
இந்த பின்னணியில் ஜிஷா வன் புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன். மாறாக கேரள் நிர்பயா என்று tag செய்வது விவகாரத்த்தை வேறொரு கோணத்தில் திசை திருப்பி கவனங்களை சிதறடிக்க செய்யும் என்றே தோன்றுகிறது.
கட்டிடம் கட்ட, சித்தாள் முதலான கூலி வேலைகளுக்கென தமிழகம் வரும் வெளி மாநிலத்தவர்களால் நேரும் படுகொலைகள் வரிசையில் கூட ஜிஷா கேஸை அணுக முடியும். எண்ணற்ற நிகழ்வுகளை சொல்ல முடியும் என்றாலும் பெண்களுக்கு எதிராக எனும்போது டி.சி.எஸ் பெணி மகேஸ்வரி கொலையை சொல்லலாம். இதுவும் பாதுகாப்பற்ற மாலை மங்கிய சூழலில் நேர்ந்த குற்றமே.
நடந்த சூழலை கவனித்தால் மகேஸ்வரி கொல்லப்பட்ட சூழல் அப்படியே ஒரு தலித்தின் தினசரி வாழ்க்கையை ஒத்திருக்கிறது. பொருளாதாரம், வாழ்க்கைமுறை, சிந்தனா முறை போன்ற எதிலும் பொறுந்தாத மனிதர்களை எதிர்கொள்ள நேர்கையில் பாதுகாப்பற்ற தன்மை உருவாகிவிடுகிறதுதான்.
ஒரு தலித் இப்படியான சூழலை தினம் தினம் கடக்க வேண்டி இருக்கிறது என்கிற ரிஸ்கை கணக்கில் கொண்டால் தலித்திற்கு வழங்கப்படும் 'இட ஒதுக்கீடு'மிக மிக மிக குறைந்த சலுகை என்றே நினைக்கிறேன். எல்லாவகையிலும் ஒதுக்கிவிட்டு இட ஒதுக்கீடு என்ற ஒன்றே ஒன்றால் சமன் செய்துவிட்டதாக ஒரு பக்கம் சொல்லப்படுகிறபோது, இன்னொரு பக்கம் இட ஒதுக்கீட்டை தராதே என்கிற கோஷங்களும் கேட்கின்றன.
இட ஒதுக்கீட்டை வேண்டாம் என்று சொல்பவர்கள் தங்களுக்குள், தங்களில் ஒருவராக தலித்தை அங்கீகரிப்பார்களா? அது நடக்கவே நடக்காது.
உள்குத்து செய்வார்கள் பாராமுகம் இருக்கும். புத்திசாலித்தனமாக புறக்கணிப்பார்கள். முதுகுக்கு பின்னால் பேசுவார்கள். மீண்டும் செக்கு மாடாக்க முயல்வார்கள். இளவரசன்களும், கோகுல் ராஜ்களும் தொடர்ந்து மர்மமான முறையில் கொல்லப்படுவார்கள். அப்படி கொல்லப்படுபவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று சொல்லவும் ஒரு கும்பல் எப்போதுமே தயாராக இருக்கும். இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று தான் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது அரசு.
மற்ற ஜாதிக்காரர்கள் தலித்களை புறக்கணிப்பதே இட ஒதுக்கீடு என்ற ஒன்று நிலைப்பதற்கு காரணம் என்றே நினைக்கிறேன். இட ஒதுக்கீடு நீக்கப்படவேண்டுமானால், தலித்கள் ஒரு சமூகத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும். இரண்டில் ஒன்று தான் நடக்கும் என்றால் அது எது என்பதைத்தான் நாம் முடிவு செய்ய வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரை அங்கீகாரம் கிடைக்காது என்கிற அடிப்படையிலிருந்து தான் இடஒதுக்கீடு பிறக்கிறது.
இக்காலங்களில் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கோஷம் போடுபவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு சதம், இடஒதுக்கீடால் பொறியியல் மருத்துவ கல்லூரிகளிலும், ஐடி கம்பெனிகளிலும் தனக்கு அருகாமையில் அமரும் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலான தலித்களை பார்த்துத்தான் கோஷம் போடுபவர்களாக இருக்கிறார்கள்.
உண்மையில் இட ஒதுக்கீடால் இப்படி தினம் தினம் பொறுத்தமில்லாத சூழலிலிருந்து விடுபட்டு, தனக்கும் தன் அறிவுக்கும், கல்வித்தகுதிக்கும் பொருளாதாரத்திற்கும் பொறுத்தமான இடங்களை சென்றடைவதின் மூலம் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் தலித்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு தான். இவர்களுக்கு தலித்களின் உண்மையான பிரச்சனைகளான சுற்றுச்சுழலில் பொருளாதாரம், கல்வி போன்ற விஷயங்களில் பொறுத்தமில்லாமை, சரியாக வழி நடத்தக்கூடிய நபர்கள் குடும்பத்தில் இல்லாமை போன்ற எண்ணற்ற காரணங்கள் குறித்து எவ்வித புரிதலும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பது "தலித்களின் உண்மையான பிரச்சனைகள் என்ன?"என்று கேள்வி கேட்பதம் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம். உடைந்த டேப் ரெக்கார்டர் போல, "இடஒதுக்கீடால் தூங்கி தூங்கியே மேல வந்துட்டான்"என்பதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். எவ்வித புரிதலும் இல்லாதவர்கள் இவர்கள் என்பதை.
இந்த ஜிஷா ஒரு வேளை கொல்லப்படாமல் இருந்திருந்தால், மரணத்தை விடவும் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேர்ந்திருக்கும். நடந்த வன்புணர்விலிருந்து மன ரீதியாக அவர் தன்னை சேகரித்துக்கொள்ள கால தாமதம் ஆகும். அதற்குள் அவரது ஆண்டுத்தேர்வுகள் கடந்து போக நேரலாம். பார்க்கப்போனால் ஒவ்வொரு தலித்திற்கும் இது போல் ஏதாவது ஒரு பேரிடர் வந்து, அதனால் அவனது கல்வியோ, அகமோ பாதிக்கப்படுகிறதுதான். இளவர்சன் மரணத்தின் போது ஒரு கிராமமே எரிக்கப்பட்டது. அந்த கிராமத்திலும் அக்கம்பக்கத்து கிராமத்திலும் எத்தனை தலித் பிள்ளைகளால் அந்த வருடம் பத்தாவது பன்னிரண்டாவது பொதுத்தேர்வு எழுத முடிந்திருக்கும்? அது அவர்களது குற்றமா? ஒவ்வொரு கிராமத்திலும் தலித் மரணித்தால் பிணத்தை ஊரைச்சுற்றித்தான் கொண்டு போக நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதை கண்முன்னே பார்க்க நேரும் ஒரு பதினைந்து வயது தலித் மீது திணிக்கப்படும் உளவியல் ரீதியிலான மனப்போக்குகள் அவனை அவனது கல்வியிலிருந்து எத்தனை தூரம் விலகிச்செல்ல வைக்கும்? அதை எதிர்த்து போராடித்தான் அவன் தன்னை நிரூபிக்க வேண்டி இருக்கிறது. இத்தனை பிரச்சனைகளை மற்ற ஜாதிக்காரர்கள் எதிர்கொள்கிறார்களா? இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இடஒதுக்கீடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
அரசாங்கம் தலித்களுக்கு மதிப்பெண்களில் சலுகை அளிப்பதற்கு பின்னால் ஒரு குறிப்பிட்ட சமூகம் அடையும் இன்னல்களின் மீதான முழுமையான புரிதல் இருக்கிறது. அந்த புரிதல் இல்லாதவர்களால் தான் அதை புரிந்துகொள்ள முடியாமல் இடஒதுக்கீடு மீது கோஷம் எழுப்ப முடிகிறது. ஏழாவது எட்டாவது தலைமுறையாக பொறியியல் மருத்துவம் படித்த படிக்கின்ற படித்து செட்டிலான மேட்டுக்குடி மக்களுக்கு கம்ப்யூட்டர் புரிகிறது, சிக்கலான பொறியியல் கணக்கு, ஸ்டேடிஸ்டிக்ஸ் , ஸ்டாக் எக்ஸ்சேன்ச் எல்லாம் புரிகிறது ஆனால் இது மட்டும் புரிய மறுப்பதுவும், புரிந்து கொள்வதையே புறக்கணிப்பதும் தான் உண்மையான உளவியல் பிரச்சனைகள் என்கிற புரிதலில் தான் யாருக்கு உண்மையிலேயே உளவியல் ரீதியிலான மருத்துவம் தேவைப்படுகிறது என்பது இருக்கிறது.