திணிப்பும் அங்கீகாரமும்
இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? இப்படியெல்லாம் வலிந்து புத்தகத்தை திணிப்பது, பிற்பாடு இத்தனை லட்சம் பிரதிகள் விற்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் என்று போட்டுக்கொள்ளத்தான். இதையே காரணமாக வைத்து ஒரு அடையாளத்தை உருவாக்கி, அதை வைத்தே விருதுகளுக்கு அடி போடுவது தான் ஐடியா.
"சமீபத்தில் கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்திரியை சந்தித்தபோது கடந்த ஓராண்டில் புத்தக விற்பனை நாற்பது சதவிகிதம் வரை சரிந்துவிட்டது என்றார்.நாங்களும் அதை நேரடியாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான புத்தக்கண்காட்சிகள் படுதோல்விகள் என பங்கேற்பாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்."
இது சமீபத்தில் உயிர்மை பதிப்பகத்தின் நிறுவனர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது முக நூலில் பகிர்ந்தது.
சில பதிப்பகங்கள் தமக்கென ஒரு அரசியல் நிலைப்பாட்டை வைத்திருக்கிறார்கள். அதற்கு இசைவாய் எழுதும் எழுத்தாளர்களை மட்டுமே அவர்கள் ஊக்குவிப்பார்கள்.. நீங்கள் எழுதும் எழுத்தில் உண்மை இருக்கிறதா இல்லையா? சரியா தவறா? என்பதெல்லாம் தேவையில்லை. அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு நீங்க ஒத்து ஊதுகிறீர்களா இல்லையா? ஒத்து ஊதினால், அந்த பதிப்பகத்தின் பெயரை வைத்து அந்த எழுத்தாளரை முடிந்தவரை உயர்த்தி பிடித்து, ஒரு புகழ் வளையத்திற்கு கொண்டுவருவார்கள். அவர்களுக்குள் குழுவாக சேர்ந்துகொண்டு குழுமனப்பான்மை வளர்ப்பார்கள். அவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொள்வார்கள். குழுவாக கூடி, அவர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு எதிர் நிலைப்பாட்டை எடுப்பவர்களை கட்டம் கட்டி காலி செய்வார்கள்.
இந்த பதிவை படிக்கும் வாசகர்களே புரிந்துகொள்ளட்டும் என்று இதை இதோடு விட்டுவிடலாம்தான். யாரும் சண்டைக்கு வர மாட்டார்கள். ஆனால், வர வர,என் கை கூட நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறது.. மடிக்கணிணியில் கைவைத்தால் அதுபாட்டுக்கு தானாகவே கிறுக்கி தள்ளிவிடுகிறது..
உண்மையில் தமிழ் எழுத்து மற்றும் பதிப்பக சூழலில் ஒரு புத்தகம் 300 பிரதிகள் விற்றாலே அதிசயம். அதையும் கூட தீவிர இலக்கியத்தில் இயங்கும் சொற்பமானவர்களே கடன் வாங்கி, செலவு செய்து வாங்கிக்கொள்கிறார்கள். ஒரு புத்தக கண்காட்சியில் மனைவியின் சம்பளத்தில் அசாதாரணமாய் ரூ.5000 த்திற்கு செலவு வைத்தார் பாருங்கள் ஒரு மனிதர்.. அரண்டே போய்விட்டேன்..
என்னைப்பொறுத்தவரை தமிழ் எழுத்துச்சூழல் அவ்வளவுக்கு Worth இல்லை..
பட்ஜெட்டில் துண்டு விழும் அளவிற்கு குடும்பப்பொருளாதாரத்தை வைத்துக்கொண்டு இலக்கியம் வளர்க்கிறேன் பேர்வழி என்று கடன் வாங்கும் அளவிற்கு தமிழ் எழுத்துச்சூழல் வொர்த் இல்லை தான்.
நியாயமான தரமான விருதுகளும் தரப்படுகின்றனதாம். அவரவர் வசதிக்கு ஒரு விருதை உருவாக்கி, கொடுத்துக்கொள்கிறார்கள். அதனால் ஒரே குழப்பமாக இருக்கிறது. எது உண்மையிலேயே தரமான படைப்பு? எது இலக்கியம்? என்பதற்கான அளவீடுகள் பதிப்பகத்துக்கு பதிப்பகம் மாறுபடுகிறது.
ஒரு சாமான்யனின் சந்தேகங்களுக்கு எந்த புத்தகமும் நேரடியாக பொட்டில் அடித்தாற்போல் பதில் சொல்வதே இல்லை. சாமான்யர்கள் இலக்கியம் பக்கம் போகாமல் இருப்பதற்கு இதுதான் பிரதான காரணம் என்று நான் சொல்வேன். சில இல்லை, பல விஷயங்களை மூடி மறைத்து தான் சொல்கிறார்கள். பூடகமாக சொல்கிறார்கள். அப்படி சொல்வதைத்தான் இலக்கிய எழுத்தின் அளவீடாகவும் வைத்திருக்கிறார்கள் என்பதுவும் மறுப்பதற்கில்லை.
ஆக, எழுத்தாளன் தானே தனது எழுத்தை மாற்றிக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறான். அதுதான் அவனை, சாமான்யர்களை விட்டு தள்ளி இருக்க வைக்கிறது.
வாசகனுக்கு திராணி இருந்தால் புரிந்துகொண்டு பின்னால் வரட்டும் என்பது அவர்களது வாதம். வாசகன் முட்டாள் அல்ல. அவன் ஒட்டுமொத்த இலக்கியவாதிகளையும் கட்டம் கட்டி ஒதுக்கிவிடுகிறான். ஃபிலிஸ்தின் சமூகம் என்று முந்நூறு பேர் 8 கோடி மக்களை சொன்னால், 'மூடர் கூடம்'என்று 8 கோடி பேர் முந்நூறு பேரை ஒதுக்கிவைக்கிறார்கள்.
எனது நாவல் தொகுதிக்கு இரண்டு விதமாகவும் கருத்துக்கள் வந்திருக்கின்றன...
சாமான்யனின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முயன்றது, இரண்டாவது வகை விமர்சனத்தை பெற்றுத்தந்திருக்கலாம். அதே முயல்வு தான் முதல் வகையான விமர்சனத்தையும் பெற்று தந்திருக்கிறது எனவும் நான் நம்புகிறேன்.
ஒரு பிரதி எல்லோருக்கும் ஒரே விதமாக தோன்றாது. பிரதியை எழுதி முடித்தவுடன் எழுத்தாளன் இறந்துவிடுகிறான் என்கிறார் ரொலாண்ட் பார்தஸ்.
முட்டாள் அரசனின் அரசவையில் கூட, அரசனுக்கு பிடித்தமான புத்தகங்கள் எழுதப்பட்டன, அப்படி எழுதியவர்களுள் சிலரை முன்னணி எழுத்தாளர்கள் என்று அந்த முட்டாள் அரசன் பிரகடனம் செய்ததும் நிகழ்ந்தது என்கிற பின்னணியில், 60 வயது கிழவன், 18 வயது இளம்பெண்ணுடன் கட்டிப்பிடித்து ஆடுவதை ரசித்து கைதட்டும் மக்கள் உள்ள சமூகத்தில் "முன்னணி எழுத்தாளன்" உண்மையில் யார் என்பதெல்லாம் விவரம் அறிந்தவர்களுக்கு தனியாக சொல்லவேண்டியதில்லை.
தெரிந்து கொள்ள மிக பல ஆர்வங்களுடனும், கேள்விகளுடனும் சாமான்யன் கோடிக்கணக்கில் சுற்றிலும் திரிந்துகொண்டே தான் இருக்கிறான். ஆனால், புத்தகங்கள் சாமாண்யனுக்காக எழுதப்படுவதில்லை என்பதுதான், புத்தகங்கள் விற்காத ஒரு சமூகமாக தமிழ் சமூகத்தை ஆக்கி வைத்திருக்கிறது என்றே எண்ணுகிறேன்.
அப்படி எளிமையாக சாமாண்யனை சென்றடைய முயன்ற ஒரு புத்திசாலி எழுத்தாளராகத்தான் சுஜாதாவை பார்க்கிறேன். தமிழ் இலக்கிய வரையறைகளை கைகொண்ட கர்வத்தில் தன்னை தொடர்ந்து வர முடியாத சாமாண்யனை ஃபிலிஸ்தின் என்று அவர் சொல்லியிருந்திருப்பாரேயானால், அவரது எழுத்தும் காணாமல் போயிருக்கலாம் அல்லது பத்தோடு பதினொன்றாகியிருக்கலாம். இறுதிவரை எளிமையான மனிதர்களுக்கு புரியக்கூடிய எல்லையிலேயே அவர் தன்னை இறுத்திக்கொண்டிருந்தார். ஏனெனில் , எழுத்துலகில் பிழைத்திருப்பது வாசிப்பவர்களின் தரத்தை பொருத்தே அமைகிறது.
இது நடக்காத வரை, விருதுகளுக்காகவும், அங்கீகரிப்புக்களுக்காகவும் புத்தகங்களை சாமான்யர்கள் மீது திணிக்கும் மனோ நிலை வளர்ந்துகொண்டு தான் இருக்கும்.
- எங்களுக்கு சொந்தமான ஒரு போர்ஷனில் வாடகைக்கு குடியிருப்பவர் தனது கல்யாண அனுபவங்கள் பற்றி சொல்கையில், திருமண விசேஷத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் திருக்குறள் புத்தகத்தை இலவசமாக தந்தார்களாம். ரொம்ப பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார்.
- திரைப்படங்களுக்கு பாடல் எழுதியே பிரபலமான அந்த பாடலாசிரியர், மண்ணின் மைந்தர், வெள்ளை ஜிப்பாக்காரர், காவியமெழுதுபவரை சமீபத்தில் ஒரு கல்லூரியின் கலாச்சார விழாவுக்கு தலைமை தாங்க கூப்பிட்டிருக்கிறார்கள். தனது சமீபத்திய புத்தகத்தை ஐந்நூறு பிரதிகள் வாங்கினால் வருவதாக சொல்லியிருக்கிறார். காவியமெழுதுபவர் வந்தால் நல்ல விளம்பரம் என்று இவர்களுக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில் மேலும் ஐந்நூறு வாங்கச்சொல்லி சொன்னாராம். ஏற்கனவே ஐந்நூறு வாங்கிவிட்டபடியால், வேறு வழியின்றி இதையும் வாங்கியிருக்கிறார்கள்.
- அந்த முன்னணி தொலைக்காட்சியில், பிரபலமான விவாத மேடையின் ஒருங்கிணைப்பாளரும் இதே தானாம். ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, போலிச்சாமியார்கள் மூலம் ஆன்மீக பக்தர்களின் தலையில் கட்டி, இத்தனை லட்சம் பிரதிகள் விற்றிருப்பதாக கணக்கு காட்டுகிறாராம்.
இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? இப்படியெல்லாம் வலிந்து புத்தகத்தை திணிப்பது, பிற்பாடு இத்தனை லட்சம் பிரதிகள் விற்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் என்று போட்டுக்கொள்ளத்தான். இதையே காரணமாக வைத்து ஒரு அடையாளத்தை உருவாக்கி, அதை வைத்தே விருதுகளுக்கு அடி போடுவது தான் ஐடியா.
"சமீபத்தில் கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்திரியை சந்தித்தபோது கடந்த ஓராண்டில் புத்தக விற்பனை நாற்பது சதவிகிதம் வரை சரிந்துவிட்டது என்றார்.நாங்களும் அதை நேரடியாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான புத்தக்கண்காட்சிகள் படுதோல்விகள் என பங்கேற்பாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்."
இது சமீபத்தில் உயிர்மை பதிப்பகத்தின் நிறுவனர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது முக நூலில் பகிர்ந்தது.
சில பதிப்பகங்கள் தமக்கென ஒரு அரசியல் நிலைப்பாட்டை வைத்திருக்கிறார்கள். அதற்கு இசைவாய் எழுதும் எழுத்தாளர்களை மட்டுமே அவர்கள் ஊக்குவிப்பார்கள்.. நீங்கள் எழுதும் எழுத்தில் உண்மை இருக்கிறதா இல்லையா? சரியா தவறா? என்பதெல்லாம் தேவையில்லை. அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு நீங்க ஒத்து ஊதுகிறீர்களா இல்லையா? ஒத்து ஊதினால், அந்த பதிப்பகத்தின் பெயரை வைத்து அந்த எழுத்தாளரை முடிந்தவரை உயர்த்தி பிடித்து, ஒரு புகழ் வளையத்திற்கு கொண்டுவருவார்கள். அவர்களுக்குள் குழுவாக சேர்ந்துகொண்டு குழுமனப்பான்மை வளர்ப்பார்கள். அவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொள்வார்கள். குழுவாக கூடி, அவர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு எதிர் நிலைப்பாட்டை எடுப்பவர்களை கட்டம் கட்டி காலி செய்வார்கள்.
இந்த பதிவை படிக்கும் வாசகர்களே புரிந்துகொள்ளட்டும் என்று இதை இதோடு விட்டுவிடலாம்தான். யாரும் சண்டைக்கு வர மாட்டார்கள். ஆனால், வர வர,என் கை கூட நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறது.. மடிக்கணிணியில் கைவைத்தால் அதுபாட்டுக்கு தானாகவே கிறுக்கி தள்ளிவிடுகிறது..
உண்மையில் தமிழ் எழுத்து மற்றும் பதிப்பக சூழலில் ஒரு புத்தகம் 300 பிரதிகள் விற்றாலே அதிசயம். அதையும் கூட தீவிர இலக்கியத்தில் இயங்கும் சொற்பமானவர்களே கடன் வாங்கி, செலவு செய்து வாங்கிக்கொள்கிறார்கள். ஒரு புத்தக கண்காட்சியில் மனைவியின் சம்பளத்தில் அசாதாரணமாய் ரூ.5000 த்திற்கு செலவு வைத்தார் பாருங்கள் ஒரு மனிதர்.. அரண்டே போய்விட்டேன்..
என்னைப்பொறுத்தவரை தமிழ் எழுத்துச்சூழல் அவ்வளவுக்கு Worth இல்லை..
பட்ஜெட்டில் துண்டு விழும் அளவிற்கு குடும்பப்பொருளாதாரத்தை வைத்துக்கொண்டு இலக்கியம் வளர்க்கிறேன் பேர்வழி என்று கடன் வாங்கும் அளவிற்கு தமிழ் எழுத்துச்சூழல் வொர்த் இல்லை தான்.
நியாயமான தரமான விருதுகளும் தரப்படுகின்றனதாம். அவரவர் வசதிக்கு ஒரு விருதை உருவாக்கி, கொடுத்துக்கொள்கிறார்கள். அதனால் ஒரே குழப்பமாக இருக்கிறது. எது உண்மையிலேயே தரமான படைப்பு? எது இலக்கியம்? என்பதற்கான அளவீடுகள் பதிப்பகத்துக்கு பதிப்பகம் மாறுபடுகிறது.
ஒரு சாமான்யனின் சந்தேகங்களுக்கு எந்த புத்தகமும் நேரடியாக பொட்டில் அடித்தாற்போல் பதில் சொல்வதே இல்லை. சாமான்யர்கள் இலக்கியம் பக்கம் போகாமல் இருப்பதற்கு இதுதான் பிரதான காரணம் என்று நான் சொல்வேன். சில இல்லை, பல விஷயங்களை மூடி மறைத்து தான் சொல்கிறார்கள். பூடகமாக சொல்கிறார்கள். அப்படி சொல்வதைத்தான் இலக்கிய எழுத்தின் அளவீடாகவும் வைத்திருக்கிறார்கள் என்பதுவும் மறுப்பதற்கில்லை.
ஆக, எழுத்தாளன் தானே தனது எழுத்தை மாற்றிக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறான். அதுதான் அவனை, சாமான்யர்களை விட்டு தள்ளி இருக்க வைக்கிறது.
வாசகனுக்கு திராணி இருந்தால் புரிந்துகொண்டு பின்னால் வரட்டும் என்பது அவர்களது வாதம். வாசகன் முட்டாள் அல்ல. அவன் ஒட்டுமொத்த இலக்கியவாதிகளையும் கட்டம் கட்டி ஒதுக்கிவிடுகிறான். ஃபிலிஸ்தின் சமூகம் என்று முந்நூறு பேர் 8 கோடி மக்களை சொன்னால், 'மூடர் கூடம்'என்று 8 கோடி பேர் முந்நூறு பேரை ஒதுக்கிவைக்கிறார்கள்.
எனது நாவல் தொகுதிக்கு இரண்டு விதமாகவும் கருத்துக்கள் வந்திருக்கின்றன...
- "முதல் நாவலாவது பரவாயில்லை. இரண்டாவதை வாசிக்கவே முடியவில்லை"என்பது ஒரு விதம்..
- "இந்த நாவல் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது கிடைத்திருந்தால், என் வாழ்க்கையே ஆக்கப்பூர்வமானதாக மாறியிருக்கும்"என்பது இன்னொரு விதம்.. (இப்படி சொன்னவர்கள் பெரும்பான்மை கல்லூரி முடித்து வேலைக்கு செல்ல துவங்கி ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்தவர்களே)
சாமான்யனின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முயன்றது, இரண்டாவது வகை விமர்சனத்தை பெற்றுத்தந்திருக்கலாம். அதே முயல்வு தான் முதல் வகையான விமர்சனத்தையும் பெற்று தந்திருக்கிறது எனவும் நான் நம்புகிறேன்.
ஒரு பிரதி எல்லோருக்கும் ஒரே விதமாக தோன்றாது. பிரதியை எழுதி முடித்தவுடன் எழுத்தாளன் இறந்துவிடுகிறான் என்கிறார் ரொலாண்ட் பார்தஸ்.
முட்டாள் அரசனின் அரசவையில் கூட, அரசனுக்கு பிடித்தமான புத்தகங்கள் எழுதப்பட்டன, அப்படி எழுதியவர்களுள் சிலரை முன்னணி எழுத்தாளர்கள் என்று அந்த முட்டாள் அரசன் பிரகடனம் செய்ததும் நிகழ்ந்தது என்கிற பின்னணியில், 60 வயது கிழவன், 18 வயது இளம்பெண்ணுடன் கட்டிப்பிடித்து ஆடுவதை ரசித்து கைதட்டும் மக்கள் உள்ள சமூகத்தில் "முன்னணி எழுத்தாளன்" உண்மையில் யார் என்பதெல்லாம் விவரம் அறிந்தவர்களுக்கு தனியாக சொல்லவேண்டியதில்லை.
தெரிந்து கொள்ள மிக பல ஆர்வங்களுடனும், கேள்விகளுடனும் சாமான்யன் கோடிக்கணக்கில் சுற்றிலும் திரிந்துகொண்டே தான் இருக்கிறான். ஆனால், புத்தகங்கள் சாமாண்யனுக்காக எழுதப்படுவதில்லை என்பதுதான், புத்தகங்கள் விற்காத ஒரு சமூகமாக தமிழ் சமூகத்தை ஆக்கி வைத்திருக்கிறது என்றே எண்ணுகிறேன்.
அப்படி எளிமையாக சாமாண்யனை சென்றடைய முயன்ற ஒரு புத்திசாலி எழுத்தாளராகத்தான் சுஜாதாவை பார்க்கிறேன். தமிழ் இலக்கிய வரையறைகளை கைகொண்ட கர்வத்தில் தன்னை தொடர்ந்து வர முடியாத சாமாண்யனை ஃபிலிஸ்தின் என்று அவர் சொல்லியிருந்திருப்பாரேயானால், அவரது எழுத்தும் காணாமல் போயிருக்கலாம் அல்லது பத்தோடு பதினொன்றாகியிருக்கலாம். இறுதிவரை எளிமையான மனிதர்களுக்கு புரியக்கூடிய எல்லையிலேயே அவர் தன்னை இறுத்திக்கொண்டிருந்தார். ஏனெனில் , எழுத்துலகில் பிழைத்திருப்பது வாசிப்பவர்களின் தரத்தை பொருத்தே அமைகிறது.
இது நடக்காத வரை, விருதுகளுக்காகவும், அங்கீகரிப்புக்களுக்காகவும் புத்தகங்களை சாமான்யர்கள் மீது திணிக்கும் மனோ நிலை வளர்ந்துகொண்டு தான் இருக்கும்.