Quantcast
Channel: ராம்பிரசாத்
Viewing all 1140 articles
Browse latest View live

மாலை நேரத்து மயக்கம் - விமர்சனம்

$
0
0
மாலை நேரத்து மயக்கம் - விமர்சனம்


வாழ்க்கைக்கு ஒரு இலக்கு இருக்கிறது. அது சந்தோஷம். அனுபவம் சேகரித்தல். வாழ்ந்து பார்த்தல். சுக துக்கங்கள் பகிர்தல்.

பிரச்சனை எதிர்பார்ப்புகள் தான்.

சுருக்கமாய் சொல்வதானால், ஹ்ரித்திக் ரோஷன் போல் கணவன் வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கலாம். ஹ்ரித்திக் ரோஷன்களின் எதிர்பார்ப்பில் அந்த பெண்களும் பொருந்திவிட வேண்டும் அல்லவா?

ஆனால்,மனோஜாவின் மனதுக்கு பிடித்தமான பாய்ஃப்ரண்ட் தருண் மனோஜாவிடம் எதிர்பார்த்தது வேறாகத்தான் இருக்கிறது. அப்படியானால், பிரச்சனை , எதிர்பாலினத்தை மதிப்பிடுதல் என்பதில் தான் வந்து நிற்கிறது.

இக்காலத்தில், ஆண் பெண் சோஷியலாக பழகும் நட்பு என்கிற அடையாளத்தை தவறாக பயன்படுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகிக்கொண்டே வருகிறது.  ஆண்கள் தான் என்றில்லை. பெண்களுள் சிலரும் இதை தவறாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்..

எனக்கு தெரிந்து ஒரு பெண், திருமணமான முதல் வாரத்திலேயே பழைய ஆண் நண்பருக்கு கல்மிஷ மின்னஞ்சல் தட்டி கட்டிய கணவரிடம் கையும் களவுமாக மாட்டினார். கேட்டதற்கு, 'அந்த ஆண் தான் அனுப்பினாராம் இவர் இப்படி செய்யாதே என்று தான் பதில் அனுப்பினாராம்'. எடுத்துப் பார்த்தால், ஒரு வருடத்திற்கும் மேலாக அவர்களுக்கிடையே இது நடந்திருக்கிறது. 'இப்படி செய்யாதே'என்று சொல்ல ஒரு வருடம் ஆகுமா? அப்படி ஒரு நட்பு கண்டிப்பாக தேவையா?  அந்த நட்பின் நோக்கம் என்ன? வாழ்க்கையின் இலக்கிற்கு இந்த நட்பு எவ்வாறு உதவுகிறது? என்கிற எந்த சிந்தனையும் இல்லை.




ஆக, ஆண் பெண் என்று இருபாலருள் சிலர் தெரிந்தே இது போன்ற தவறுகளை மறைமுகமாக செய்துகொண்டுதான் முதுகில் குத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். குத்துபட்டவனின் தைரியத்துக்கு ஏற்ப தண்டனையாகவோ, சகிப்புத்தன்மையாகவோ மாறிவிடும். ஆக சோஷியலிசம் என்கிற பெயரில் ஆண், பெண் இருவரில் எல்லோரையுமே கண்ணை கட்டிக்கொண்டு நம்புவதற்கில்லை. சரியான துணையை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. ஆரோக்கியமான அழகான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள, ஓரளவுக்கேனும் மதிப்பீடுகளில் கறாராக இருக்க வேண்டி இருக்கிறது.

ஆனால் மனோஜா போல் ஓரளவுக்கு நியாயமான சிந்தனைகளை கொண்ட பெண்ணை தருண் நிராகரிப்பதற்கு தருணின் பெண் உடல் மீதான வேட்கைதான் காரணம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. உண்மையான காரணம், மனோஜாவின் எதிர்பார்ப்புகளே.

எப்படி என்றால், "அவ கூட செக்ஸ் வச்சிக்கணும்னா அவளுக்கு மனசார புடிக்கணும்.. அதுல அவ தன்னை பரிபூரணமா உணரனும்.. அப்படி யார்கிட்ட அவ உணர்கிறாளோ அவன்கிட்ட தான் தன்னை தரணும்ன்னு அவ ஆணித்தரமா இருக்கா"என்று மனோஜாவின் நண்பன் கிருஷ்ணாவிடம் சொல்கிறான்.

இன்றைய நவீன உலகம் என்பதே கட்டமைப்பை முட்டாக மறுப்பதுதான்.. டான்ஸ் ஆடுறவனுக்கு டான்ஸ் ஆடுற பொண்ணை பாத்தா சண்டைதான் வரும் என்று நினைக்கக்கூடிய இச்சமூகத்தில், ஒரே விதமான எண்ணப்பாடுகள் கொண்டவர்கள் ஒன்றாக சேர்வதில்லை.. ஆணுக்கும் பெண்ணுக்கு எந்த விஷயத்திலும் புரிதலில் மிகப்பல வேற்றுமைகள் இருக்கின்றன.வேற்றுமைகளைத்தாண்டி உருவாவதுதான் காதல் என்பது வெகுஜன நிலைப்பாடாக இருக்கிறது.



அப்படி இருக்கையில், ஆணை பெண்ணோ , பெண்ணை ஆணோ பரிபூரணமாக உணர வைப்பது எல்லையற்ற, நிபந்தனைகளற்ற, எதிர்பார்ப்புகளற்ற, சரணாகதியடைவதையொத்த‌ அன்பு வைப்பதால் மட்டுமே சாத்தியமாகும். இப்படி சொல்வதன் மூலம் பெண், தனக்கான சரணாகதியடைவதையொத்த‌ அன்பை தரச்சொல்லி நிர்பந்தப்படுத்த முனைகிறாள். "அது ஒன்று இருந்தால் போதும், எப்பேற்பட்ட மொக்கையன் கூடவும் என்னால் வாழ முடியும்"என்பதே அவளது வாதம். இதுதான் "நீ எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்.. ஒரு பெண் உன்னை தேர்வு செய்ய வேண்டும்"என்கிற பெண்களின் வாதத்திற்கு அடிப்படை. பார்க்கப்போனால் பெண்கள் எல்லோருமே இப்படி ஒரு எதிர்பார்ப்பை கைகொண்டவர்களாகவே இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

ஏனென்றால், ஆணை பொறுத்த வரை, பெண்களின் இந்த வாதம், பாதுகாப்பற்ற , பத்திரமற்ற, பற்றுகோல் இல்லாத‌ ஒரு வாதம். ஆணும் மனிதன் தானே. அதே சரணாகதி அன்பை எதிர்பார்ப்பவன் தான். அதிலும் தருண் போன்ற, பெண்மைத்தன்மை சரிபாதி கொண்ட அழகான சென்ஸிபிள் ஆண், பெண்ணுக்கு சமமாக சரணாகதி அன்பை எதிர்பார்ப்பவனாகத்தான் இருக்கிறான்.

மேலும் சரணாகதி என்பது ஒருவிதமான மயக்க நிலை வெளிப்பாடு. மயக்கம் என்பது தற்காலிகமானது. உதாரணத்திற்கு, காதலித்த பெண் காதலனை நம்பி ஓடிவந்துவிடுகிறார் என்று வைத்துக்கொண்டால், பத்திரமற்ற தன்மை உருவாகிவிடுகிறது. காதலன் பிடிக்காமல் அந்த பெண் வேறொரு நபருடன் ஓடிவிட்டால், காதலர் யாரிடமும் போய் கேட்க முடியாது. ஏனென்றால் பெற்றவர்கள் பார்த்து செய்த திருமணம் இல்லை அல்லவா? காதலன் திருமணத்திற்கு பிறகு பொறுக்கி என்று தெரியவந்தால், ஓடிவந்த காதலியால் ஒன்றும் செய்ய இயலாது. பெற்றவர்களை விட்டுவிட்டு வந்தாயிற்று அல்லவா? காதலித்த கணவர் இறந்துவிட்டால், சரணாகதி நிலையில், கூடவே செத்துவிட தோன்றும் தான். பிள்ளைகளை யார் பார்ப்பது? காதலித்த கணவன் குடித்துவிட்டு அடித்தால், சரணாகதி மனைவி, காதலின் பெயரால் பொறுத்துக்கொள்ளலாம் தான். ஆனால், நான்கு சுவற்றுக்குள் ஆணிடம் அடிவாங்கும் பெண்ணை பார்த்து வளரும் பிள்ளை எப்படி வளரும் என்று யோசனை வேண்டாமா? இந்த லாஜிக்குகளையெல்லாம் யோசிக்கவில்லை என்றால் சரணாகதி வெளிப்பாடு வரும் தான்.  சரணாகதி வெளிப்பாட்டிற்கு தர்க்கரீதியிலான இருத்தல் இதுதான். லாஜிக் புரியக்கூடாது. அது தற்காலிகம் தான்.




இந்த மயக்கத்தை மனோஜா தருணிடம் எதிர்பார்ப்பதாலும், கிருஷ்ணா மனோஜாவுக்கு தந்து மனோஜாவை வெல்வதாலும் தான் படத்துக்கு 'மாலை நேரத்து மயக்கம்'என்று டைட்டில் வைத்தார்களோ என்னவோ.

ஆண்கள் பெரும்பாலும் சமூகம் சார்ந்து யோசிப்பவர்களாக இருப்பினும் இளம் வயதில் முதிர்ச்சி இன்மை, அவர்களை மயக்க நிலையில் பிதற்றுபவர்களாக வைக்கிறது. அதனால், ஈசல் போல பெண்களை அடைகிறவர்களாக நாம் பார்க்கிறோம். ஆனால் அது மயக்க நிலையில் தான் நிகழ்கிறது என்கிற ஒன்றை குறித்துக்கொள்ள வேண்டும். மயக்க நிலை தற்காலிகம் தான் என்பதால் எது என்றாவது தெளிகையில், முதிர்ச்சி வருகையில் ஆண், தன் உண்மையான தேடலை கண்டடைகிறான். அந்த தேடலை நோக்கி தனது பயணத்தை மேற்கொள்கிறான்.

பிரச்சனை, மயக்க நிலையில், வாழ்க்கை குறித்த முடிவுகளை எடுப்பதே.

மனோஜாவும் தருணும் சம அளவிலான அறிவுத்திறன் உடையவர்கள் என்னும்போது, சரணாகதி அன்பை இருவருமே எதிர்பார்த்து, அது கிடைக்காத போது விட்டு விலகுகிறார்கள்.

ஆனால், கிருஷ்ணாவுக்கு பெண் வாடையே துவக்கித்திலிருந்து இல்லை என்பது பெண் குறித்த குறை அறிவாகப்போய், மனோஜா போல் ஒரு பெண் கிடைத்ததும் சரணாகதி என்கிற மயக்க நிலைக்கு அமிழ்த்துகிறது. அப்போது அவன் மனோஜாவின் எதிர்பார்ப்புகளுக்கு பொறுந்திவிடுகிறான். பார்க்கப்போனால், அதுதான் நிஜத்திலும் நடக்கிறது.

தெளிவான ஆண்கள் கருமமே கதியென்று திரிய, சரணாகதி அன்பை வெளிப்படுத்துபவர்கள் தான் பெசன்ட் நகர் , ஈ.சி.ஆர் என்று காதலிகளோடு தூள் பரத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பலருக்கு காதலில் வெற்றியடைவது கூட இலக்கில்லை. சரணாகதி அன்பை சுவைக்க வேண்டும். அந்த நிமிடத்தை வாழ்ந்துவிடவேண்டும். சூப்பர் ஃபிகருக்கு சப்பை காதலன் அமைவதெல்லாம் இந்த லாஜிக் தான். சரணாகதி அன்பு. அதை ஒரு பெண் மேல் வைக்கத் தெரிந்தால், காதல் கியாரண்டி.

வாழ்க்கை கியாரண்டியா இல்லையா என்பதெல்லாம் அவரவர்களின் சொந்த ரிஸ்க் தான். இந்த ரிஸ்கில் தான் சப்பை காதலனை கழற்றிவிட்டுவிட்டு சூப்பர் ஃபிகர் அமேரிக்காவில் செட்டில் ஆவதெல்லாம் நடக்கிறது. காதலை, மயக்க நிலையில் மேற்கொண்டதால் இந்த செட்டில்மென்டை தவறென்று பார்க்க முடியாது. ஏனெனில் , மயக்க நிலை தெளிந்த ஆண்கள் கர்ப்பமான காதலியை கழற்றிவிட்டு தலைமறைவாகிவிடுவது இல்லையா? அதுபோலத்தான்.

சிலருக்கு இயல்பிலேயே முதிர்ச்சி இருக்கும். அவர்களால் சரணாகதி அன்பை வெளிப்படுத்த முடியாது. பெண்களால் ஏன் ஆண்களுக்கு தாஜ்மஹால் கட்ட முடிந்ததில்லை என்பதற்கு இதுதான் பதில் என்று நான் நினைக்கிறேன். முதிர்ச்சியானவர்கள் ஆண்களிலும் உண்டு. ஆனால் அவர்களால் காதல் செய்ய முடியாது என்றெல்லாம் இல்லை. எல்லாம் புரிந்த பிறகும் காதல் வரும். அவர்களுக்கான மதிப்பீடுகளுக்கு உட்பட்டு, அறிவுக்கு உட்பட்டு காதல் நிச்சயம் வரும். 'மெளன ராகம்' மோகன்,  'காதல்'படத்தில் சந்தியாவின் கணவர் கேரக்டர், ஹம் தில் தே சுகே சனம் அஜய் தேவ்கன் கேரக்டர், போன்றவைகள் அப்படியான காதல்களை பேசுவன தாம்.

சரணாகதி அன்பு நிலைப்புத்தன்மை அற்றது. மயக்க நிலை நீடிக்கும் கால கட்டம் வரைதான் அந்த மயக்க நிலைக்குள் எடுக்கப்பட்ட முடிவுகளும் நீளும். சிலருக்கு சில நாட்களே நீடிக்கும். சிலருக்கு காலம் முழுவதும் மயக்க நிலை தொடரும். முதிர்ச்சியே வராது.

நீங்கள் செய்தித்தாள்களில் பார்க்கலாம். 'கர்ப்பமாக்கிவிட்டு, காதலர் தலைமறைவு', 'காதல் கணவரின் கள்ளக்காதலி கொலை'என்றெல்லாம். எல்லாம் மயக்க நிலையின் பக்க விளைவுகள் தாம்.


எழுதிக்கொண்டிருக்கும் நாவலில் இந்த விஷயங்களை இன்னும் தெளிவாக பேசியிருக்கிறேன். நாவலின் டைட்டில் 'உங்கள் எண் என்ன?'.. இந்த டைட்டில் ஓகே வா? நண்பர்கள் ஆலோசனை சொல்லலாம்.. சுடச்சுட தயாராகிக்கொண்டிருக்கிறது இந்த நாவல். கடந்த வருடம் இரண்டு குறு நாவல்கள் எழுதினேன். இரண்டுமே திருப்தியாக இல்லை. ஆனால் இந்த நாவல் 150 பக்கங்கள் தாண்டி திருப்திகரமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. புத்தகமாக வெளிக்கொணர ஒரு பதிப்பகம் பிடிக்கவேண்டும்.

Toyota Corolla

$
0
0
Toyota Corolla


இரண்டு நாட்களாக Atlanta வில் உள்ள Toyota showroom களுக்கு அலைந்து கொண்டிருக்கிறேன். இங்கே பக்கத்தில் Roswell road ல் ஒரு ஷோரூம் இருக்கிறது. அழைத்தேன். வீட்டிற்க்கே வந்து பிக்கப் செய்துகொண்டார்கள்..

முதலில் ஆப்பிரிக்க கறுப்பியோ, பிரேசில் கட்டழகியோ வருவாள் என்று தான் நினைத்தேன்.. ம்ஹும்.. துருவ் பட்டேல் என்று ஒரு மும்பைக்காரன் தான் வந்தான். ஆறு மாதங்கள் முன்பு தான் விற்பனை பிரதிநிதியாக சேர்ந்திருக்கிறான். இங்கே பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக படித்துக்கொண்டே வேலை செய்கிறான்.

இந்திய முகத்தை பார்த்ததும்  எவன் எவனையோ நம்புவதற்கு இந்தியனை நம்பலாம் என்று தோன்றியது.

அழைத்துப்போய் காரை காட்டினான். ஒரு Test Drive போனேன். இங்கே கார்கள் எல்லாம் ஆட்டோமெடிக் தான். கியரெல்லாம் கிடையாது. பிரேக், ஆக்ஸிலரேட்டர். அவ்வளவுதான். ஏற்கனவே சென்னையில் கடந்த பத்து வருடங்களாக கார் ஓட்டி பழகியிருக்கிறேன். ஆதலால் பிரச்சனை இல்லை. என்ன ஒன்று? காரை வலது பக்கம் ஓட்ட வேண்டும். கியரை வலது கையால் மாற்ற வேண்டும். இடது பக்கம் ஸ்டியரிங் இருக்கும்.

இங்கே அமேரிக்காவில் கார் இல்லாமல் எதுவும் முடியாது. கிட்டத்தட்ட ஸ்தம்பித்த கதைதான். எல்லாவற்றுக்கும் ஊபரை நம்பிக் கொண்டிருக்க‌ முடியாது. Camry வாங்க போனவன் நான். Corolla ல் தேங்கிவிட்டேன். அதிலேயே எல்லா வசதிகளும் தேவைக்கு மேலேயே இருந்தது. விலையும் கைக்கு அடக்கம். Camry ல் கொஞ்சமே கொஞ்சம் இடம் அதிகம். இடமென்றால், கால் இன்னும் கொஞ்சம் நீட்டிக்கொள்ளலாம். அவ்வளவுதான். என்ஜின், குதிரை திறம் என்று சிற்சில வேறுபாடுகள் இருந்தாலும் நான் ஒன்றும் ரேஸில் பங்கேற்க பயனபடுத்தப்போவதில்லை என்பதில் அதெல்லாம் அடிபட்டுவிடும்.

எல்லாம் பேசிவிட்டு விலை எத்தனை என்றேன். என் பாங்க் தகவல்கள், சோஷியல் செக்யூரிட்டி எண், லைசன்ஸு எல்லாம் வாங்கிக்கொண்டு உள்ளே போனான். இங்கே எல்லாவற்றுக்கும் Credit History என்று ஒன்று இருக்கிறது. அது இருந்தால் நல்ல குறைவான வட்டியில் லோன் கிடைக்கும். எந்த விலை உயர்ந்த பொருள் வாங்க வேண்டுமென்றாலும் Credit History இருக்கவேண்டும். இது இந்த கிரிக்கெட்டில் Duckworth Lewis method என்று சொல்வார்களே.. அது போல.. எப்படி கணக்கிடுகிறார்கள் என்பது எவனுக்கும் முழுசாக தெரியாது..

உள்ளே போனவன் ஒரு பத்து நிமிடத்தில் வந்தான்.

விலை 17,790 டாலர் என்றான். நிச்சயம் இது அதிகம் என்று தோன்றியது. ஏனெனில் போவதற்கு முன்பே நண்பர்களை அணுகி சமீபமாக இந்த காரை வாங்கிய விலையை தெரிந்து வைத்திருந்தேன். நான் வேறு டீலர்களுக்கு போய்விடுவேனோ என்று பயப்பட்டிருப்பான் போல.

"Credit History குறைவாக இருப்பதால் எங்களால் இந்த விலையை குறைக்க முடியாது..உங்களுக்கு ஒரு ஐடியா தருகிறேன்.. நீங்கள் அடிக்கடி Credit History பார்க்காதீர்கள். ஒவ்வொரு முறை பார்க்கையிலும் Credit History குறையும்"என்றான். தழை திங்கும் ஆடு போல் மண்டையை மண்டையை ஆட்டிவிட்டு எழுந்து வந்துவிட்டேன்.

வீட்டுக்கு வந்ததும் வேறொரு  டீலரிடம் கேட்டேன். அதே தான். லைசன்ஸு, சோஷியல் செக்யூரிட்டு எண் எல்லாம் இவர்கள் பங்குக்கு ஒரு முறை வாங்கினார்கள். விலை 17, 290 என்று பதில் வந்தது. 500 டாலர்கள்!!

இதை அந்த துருவ் படெலிடம் சொன்னேன். அவ்வளவுதான்.

முதலில், 'நீங்கள் என்னிடம் வாங்குவதாக உறுதி அளித்தீர்களே'என்றான்.

"எல்லா டீலரக்ளை விடவும் குறைவாக தருவதாக நீ கூடத்தான் உறுதி அளித்தாய்"என்றேன் பதிலுக்கு. என்னென்னவோ பேசிப்பார்த்தான். நான் மசியவே இல்லை. பிறகு தடாலடியாக காலில் விழுந்துவிட்டான். காலில் என்றால் காலில் அல்ல. கிட்டத்தட்ட... "நாம் ஒரே நாட்டை சேர்ந்தவர்கள். அண்ணன் தம்பி போல. தயவுசெய்து உதவி செய்.."என்கிற ரீதியில் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை என குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருக்கிறான்.

மும்பைக்காரர்கள் பிஸினஸ் என்று வந்துவிட்டால், காலில் கூட விழுவார்கள் என்பது சரியாகத்தான் இருக்கிறது. நானா மசிகிற ஆள்!!. அவன் சொன்னது போல், Credit History செக் செய்தால் எல்லாம் உடனே குறையாது. நான் வேறு டீலர்களிடம் சென்று விடக்கூடாதென்று பொய் சொல்லியிருக்கிறான்.

ஆனால், நம்மூர்க்காரர்கள் வெளி நாட்டுக்கு வந்தும் இங்கே சக இந்தியன் மீது எமோஷனல் அட்டாக் செய்ய முயல்வதும், ஏமாற்றுவதும் அசூயையாக‌ இருக்கிறது. பாதி ஆங்கிலம், பாதி இந்தியில் எமோஷனல் ஹத்யாச்சார் என்பார்கள்.. நம்மூர்க்காரர்களை நம்புவதை விட, பேசாமல் அமேரிக்கனையே நம்பிவிடலாம் போல. விதிகளுக்கு பயப்படுவார்கள். அவன் விலை குறைத்தால் ஒழிய நான் வாங்குவதாக இல்லை.

"இந்தி கற்றுக்கொள்ளாதவர்கள் வெள்ளத்தில் மூழ்கினால் தான் என்ன?"என்று கேட்ட மும்பைக்கார ஜாதி தானே இவனும். உள்ளுக்குள் என்ன நினைத்துக்கொண்டிருப்பான் என்று தெரியாதா?! அதிலும் படேல் சமூகத்தவன். இங்கே அமேரிக்காவில் வியாபாரம் செய்யும் இந்தியர்களில் பட்டேல் சமூகத்தினர் கிட்டத்தட்ட அறுபது சதம். மீதி குஜராத்திகள். நானா சிக்குவேன்?.. "இந்த தில்லாலங்கடி வேலை எங்களுக்கும் தெரியும்"என்று இருக்கிறேன்.. விலை குறைக்கிறானா பார்க்கலாம்...

பட்டேல் என்றவுடன் நியாபகம் வருகிறது. கொஞ்ச நாள் முன்பு வரை, ஹர்திக் பட்டேல் என்றொருவர் பட்டேல் இனத்தவறுக்கு இட ஒதுக்கீடு என்று கத்திக்கொண்டிருந்தார். அவரை இப்போது ஊடகங்களில் காணோம். அவருக்கு பதிலா கன்னையா குமார். அஃப்சல் குரு, வெமுலா அது இது என எல்லார் பெயரையும் இழுத்து கூட்டாஞ்சோறாக்கி டிஃபரண்டாக ஊடகங்களில் தோன்றுகிறார். இவரும் காணாமல் போய்விடுவார். நாளை, வேறொரு மொன்னையா குமார் வருவார். அல்லது ஒரு சுமார் மூஞ்சி குமார். இப்படி புகழ் வெளிச்சம் படுகிறவனையெல்லாம் வாழ்க்கையில் வெற்றிபெற்றவனாக பார்க்கத்தான் நம் சமூகமும் பழகி இருக்கிறது.

எல்லாம் ஊடக பசி. வேறொன்றும் இல்லை. ரோட்டில் துப்பிவிட்டு, பூச்சிகளுக்கு டிஃபன் போட்டேன் கதைதான். வாழ்க ஜன நாயகம்.

ஆனால், இந்த இழவெடுத்த ஊடக பசியில், அடிப்படையிலேயே குளறுபடியாய் இருக்கிறவன்கள் எல்லாம் கொஞ்சம் புகழ் வெளிச்சத்துக்கு அவ்வப்போது வந்துவிட்டு, அதை வைத்தே வாழ்வதைத்தான் பார்க்க சகிக்கவில்லை.

பின் நவீனத்துவ மற்றும் இருத்தலிய உலகில் இதையெல்லாம் சத்தம் போட்டு சொல்லவும் பயமாக இருக்கிறது. "ஏன் அவனெல்லாம் வாழக்கூடாதா?"என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுவார்கள். எதற்கு வம்பு!!


பெண்கள் தின வாழ்த்துக்கள்

$
0
0
பெண்கள் தின வாழ்த்துக்கள்.


2014 பிற்பகுதிகளில் நடந்த சில நிகழ்வுகளால் 2015 பெண்கள் தினம், பெண்கள் மீது எனக்குள் திணித்த அவநம்பிக்கைகளை, சில பெண்களால் எனக்கு நேர்ந்த துரோகங்களை, வெறுப்புகளை, துவேஷங்களை, ஏமாற்றங்களை, துக்கங்களை, கஷ்டங்களை, மான அவமானங்களை, அம்மா என்கிற ஒரு பெண்ணும், தங்கை என்கிற ஒரு பெண்ணும் கடந்து போக வைத்தார்கள். இவ்விரண்டு பெண்களும் மீண்டும் பெண்கள் மீது நம்பிக்கை கொள்ள வைத்தார்கள். நடந்த நிகழ்வுகளை 'எல்லா பெண்களும் நல்லவர்களல்ல என்றாலும் பெரும்பான்மை நல்ல பெண்கள் இருக்கிறார்கள்'என்கிற எண்ணப்பாட்டை மீண்டும் மீட்டெடுத்து வலு சேர்த்தார்கள்.


அம்மா, தங்கை என்கிற இந்த இரண்டு பெண்களால், மீண்டும் பழையபடி, இன்னொரு நல்ல பெண்ணை துணைவியாக அடைய முடியும் என்கிற எதிர்பார்ப்பு துளிர்விட்டு வேரூன்றி இருக்கிறது. நான் அதிகம் பெண்களுடன் பழகியதில்லை. நான் அதிகம் அறிந்த பெண்கள் இவ்விரண்டு பெண்களே.

பெண்கள் தினத்தில் அம்மா மற்றும் தங்கைக்கும், இவர்கள் போன்ற எல்லா அம்மாக்களுக்கும், தங்கைகளுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.

குறுங்கதைகள் - 3

$
0
0
குறுங்கதைகள் - 3

கிரகம் என்கிற பெயரில் ஒரு பக்க கதை ஒன்று எழுதினேன்.. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த கதை இப்போது ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. Literary Yardஎன்கிற ஆங்கில இதழ் வெளியிட்டிருக்கிறது.

STORY: PLANET

By: Sri Ram
planetearth
At the Extra-terrestrial Intelligence Research Center, they were talking while looking at the wide big screen, which showed numerous stars as dots, floating rocky planets and gaseous clusters.
“Hey, this one is located 20 light years away. I think, it should be habitable with the right gravity and pressure as it is revolving around its star very comfortably in the goldilocks zone”
“Does it have water?”
“I don’t think so. But it should had had long time ago, may be a million years. Look at the lines over there. These lines say water had been flowing in there once.”
“I see. Could it have supported life? Like Aliens?”
“Definitely. If there was water, there should have been life. Million years ago, but not now”
“Why?”
“Not sure. Meteors must have had a chance”
“If it was a meteor, there should have been a crater on the surface. But nothing like that shows up in the picture.”
“May be, the aliens must had exhausted all the water and oxygen and made the planet, a raging hurricane of useless gases and acid rains”
“I see. Let us send a probe and do some basic research on the surface. Tell the co-ordinates for the planet”
“OK. Write it down. Galaxy is Milky Way. It is located very close to Zodiac Star Cluster and is the third planet to its star.”
“OK. Noted. Give it a name now”
“Let us call it, Earth”


இந்தக்கதை குறுங்கதை தமிழில் இதோ:




கிரகம் - ஒரு பக்க கதை




விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரால் இருந்த பெரிய திரையில், கரிய பின்னணியில், புள்ளி புள்ளிகளாக நட்சத்திரங்களும், கோள்களும் புகை மண்டலங்களும் தெரிந்தன.

'ஏய், இந்த கிரகம் இருபது ஒளிவருஷம் தள்ளி இருக்கு.. ஆனா, அது சுத்தி வர்ற சூரியனை விட்டு சரியான தூரத்துல இருக்கிறதுனால, நம்மளால அங்க குடியேற முடியும்ன்னு தோணுது'

'ஓ.. அங்க தண்ணி இருக்கா?''

'தண்ணி இப்போ இருக்கிறா மாதிரி தெரியலை.. ஆனா கோடி வருஷத்துக்கு முன்னால இருந்திருக்கலாம்.. ரேகை ரேகையா தெரியிது பாரு.. இதெல்லாம் தண்ணி ஓடியிருந்தா தான் வரும்.. இந்த கிரகத்துல அப்படி ரேகை ரேகையா தெரியிது..'

'அப்போ உயிர்கள் ஏதாவது இருந்துருக்குமா? ஏலியன் மாதிரி?'

'மாதிரி எல்லாம் இல்லை.. கோடி வருஷத்துக்கு முன்னால ஏலியன் இருந்திருக்கலாம் தான். இப்போ இல்லை'

'ஏன் இப்போ இல்லை?'

'தெரியலை.. ஏதாச்சும் கல்லு மோதியிருக்கலாம்..'

'ஆனா, கல்லு மோதியிருந்த பெரிய பள்ளம் இருக்குமே..அப்படி ஒண்ணும் இல்லையே.. கிரகமே சிவப்பா இருக்கு.. அமில புயல் வீசுதுன்னு இன்ஃப்ரா ரெட் சொல்லுதே'

'ஒருவேளை அங்க இருந்த ஏலியனே தண்ணியையும் காத்தையும் அமிலமா ஆக்கி வாழ தகுதியில்லாம அழிச்சு, அதுனால தானும் அழிஞ்சிடுச்சோ என்னமோ?'

'சரி சரி... ஒரு ப்ரோப் அனுப்பி பாக்கலாம்.. நீ அந்த கிரகத்தோட இருப்பிடம் சொல்லு..குறிச்சிக்கிறேன்'

'ஓக்கே. எழுதிக்கோ... மில்கி வே காலாக்ஸி.. ஸோடியாக் நட்சத்திரக்கூட்டம் கிட்ட இருக்கு.. நட்சத்திரத்திலிருந்து மூணாவது கிரகம்.. ஒரு நிலா கூட இருக்கு....'

'சரி அந்த‌ கிரகத்துக்கு என்ன பேர் வைக்கலாம்?'

'பூமி'



 -   ஸ்ரீராம்

காலம்

$
0
0
காலம்


பொதுத்தேர்வுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்கின்றன.. எங்கள் குடும்பத்தில் ஒரு ஐந்து வருடங்கள் முன்பு வரை ஒருவர் மாற்றி ஒருவர் பொதுத்தேர்வு எழுதிக்கொண்டிருந்தோம்.. அதனால் எல்லா வருடங்களிலும், இந்த மாதங்களில் , அடிவயிற்றில் பந்துகள் உருளத்துவங்கிவிடும்...

இப்போது அப்படி இல்லை.. எங்கள் குடும்பத்தின் கடைசி தங்கை பொறியியல் சேர்ந்தாகிவிட்டது என்பதால் குடும்பமே இப்போது நிம்மதி பெருமூச்சு விடுகிறது. காலம் தான் எத்தனை வேகமாக ஓடுகிறது? காலம் என்றவுடன் ஒன்று நினைவுக்கு வருகிறது.

மகாபாரதத்தை சிறுவயதில் டிவியில் பார்த்திருந்தால் நீங்கள் ஒன்றை கவனித்திருக்கலாம். துவக்கத்தில் காலம் கதை சொல்வது போல் இருக்கும். (பாண்டவர் - கெளரவர் போரின்போது, திருதிராஷ்டிரனின் மந்திரி ஞானக்கண்ணில் பார்த்து கதை சொல்வார் என்பது வேறு விஷயம்).

If there is one which is immortal, it is Time என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்..

அந்த வாக்கியம் கொஞ்சம் தத்துவ செரிவுடன், கொஞ்சம் அமானுஷ்ய தன்மை வாய்ந்ததாக வேறு இருக்கவும் நானும் கூட அவ்வப்போது அதை பயன்படுத்தி சுற்றி இருப்பவர்களிடம் பீதியை கிளப்பியிருக்கிறேன்

எல்லாம் பாழாய்ப்போன அந்த யூக்லீடியன் ஜியாமெட்ரியை படிக்கும் வரை தான். படித்த பிறகு ........................ நாசமாய் போக...

சுருக்கமாக சொல்வதானால், Time is Mortal. காலம் இறக்கக்கூடியது தான். இன்னும் சொல்லப்போனால், பிரபஞ்சத்தின் இன்னொரு மூலையில் நீளவும், சுருங்கவும் கூடியது.

காலம் பிரச்சன்னமான பிறகு தான் அண்டங்களும், கோள்களும் பிறந்தது என்கிறது வேத வானியல். வெவ்வேறு பால்வெளியில் காலம் சுருங்கவும், நீளவும் செய்கிறதாம். ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நினைத்தால் புல்லரிக்கிறது. மனிதர் மூளையையே உடம்பாக வைத்திருந்திருக்கிறார்.

'உனக்கேன் இந்த வேலை? யூக்லீடியன் ஜியாமெட்ரியை ஏன் நோண்டினாய்?'என்கிற உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்கு இங்கிருந்தே கேட்கிறது... நோண்ட காதலி என்று யாரும் இல்லையே... வேறு எதைத்தான் நோண்ட.. சும்மா ஒண்ணும் நோண்டவில்லை...

எம்.பி.ஏ கணிதத்தில், முக்கோணத்திற்கு பருமன் அதாவது வால்யூம் இருக்கிறது என்று இருக்கிறது. அதை யோசிக்கையில், திடீரென்று முக்கோணம் குறித்து ஒரு வாதத்தில் கடுப்பாகி, நான் ஒரு நண்பனை அடிக்கப்போக, பெரிய தகராறு ஆகிவிட்டது. அவன் பக்கத்து பள்ளியிலிருந்தெல்லாம் ஆள் கூட்டிக்கொண்டு வந்துவிட்டான். இது நடந்தது ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில். பனகல் பூங்கா எதிரால் இருக்கிறதே. அதே தான்.. அப்போதெல்லாம் அது நந்தவனம்..பார்க் அல்ல.. பஸ் ஸ்டாப்... ஏனெனில் அந்தப்பக்கம் சாரதா வித்தியாலயா மேல் நிலைப்பள்ளி வேறு... மாலை மூன்று மணி தாண்டினால், பச்சை பசேல் என்று (இப்போதும் பார்க் அல்ல.. பள்ளி பெண்களைத்தான் சொன்னேன்..ஹிஹிஹி) ஒரே தாவணிக்கனவுகள் தான்...

பார்த்தீர்களா, பேசிக்கொண்டே வேறு எங்கோ வந்துவிட்டேன்.. மனம் என்னும் குரங்கு லம்போர்கினி கார் எல்லாம் வைத்துக்கொண்டு, லைசன்சு இல்லாமல் ஓட்டும் போல... கண் இமைக்கும் நேரத்தில் கன்னாபின்னாவென்று எங்கெங்கோ போய்விடுகிறது...

முதலில் இரண்டு கோணங்கள் மட்டுமே இருந்தது.. இது நடந்தது கணிதத்தின் ஆரம்ப கட்டங்களில். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்கிற ரேஞ்சுக்கு கிரேக்க கணித மேதை யூக்லிட் இருந்திருக்கிறார். அவருடைய கணிதமே நாம் ஆரம்பத்தில் பயன்படுத்திய கணிதம் என்கிறார்கள் இதுவரை ஏரியாவுக்கான ஃபார்முலா மட்டுமே மனனம் செய்ய வேண்டி இருந்திருக்கும். கணித பேப்பரை ஜமாய்த்துவிடலாம். அப்போது உருவானது முக்கோணம். இதுவும் யூக்லிடின் கைவண்ணம் தான். மூன்று கோணங்கள் , அதாவது x, y, z வந்துவிட்ட பிறகு தான் வால்யூமெல்லாம் வந்தது. அதுவரை கூட ஓகே.. ஓரளவுக்கு மார்க் வாங்கி தேறிவிடலாம்.. ஃபார்முலாவில் கூடுதலாக வால்யூம். அவ்வளவுதான். கொஞ்சம் முக்கினால் நினைவுக்கு வந்துவிடும்.

இந்த மனிதர் ஐன்ஸ்டைன் வந்தார் பாருங்கள்...கூடவே அத்தனை சனியையும் கூட்டி வந்துவிட்டார்.. ஆறாவது கிரகமாக, தன் போக்கில் சுற்றிக்கொண்டிருக்கும் சனியை பூமிக்கே கூட்டிவருவதில் இந்த மனிதருக்கு அப்படியென்ன ஆர்வம் என்று தெரியவில்லை... இந்த ஆள் வந்ததுக்கப்புறம் தான் எல்லா குழப்பமும்.. இவர் சிலவற்றை சொல்லப்போக யூக்லீடியன் ஜியாமெட்ரி புஸ்ஸாகிவிட , அதை தூக்கி பரணில் போட்டுவிட்டார்கள்...

அதன்பிறகு சர்வமும் ஐன்ஸ்டைன் மயம்... முக்கோணத்திற்கே பருமன் அதாவது வால்யூம் வந்துவிட்டது. குழப்பமோ குழப்பம்.

அதுவரை முக்கோணத்துக்குள் உள்பாகை மொத்தம் 180 மட்டுமே என்று ஸ்திரமாக நம்பி மார்க் வாங்கியவர்கள், அரியர் வைக்க‌ ஆரம்பித்தார்கள். எப்படி?



பூமி பந்து போல் இருக்கிறதாம். அதில் ரயில் தண்டவாளம் போல் ஒட்டவே ஒட்டாத கோடுகள் வரையவே முடியாதாம். ஏனெனில் அந்த இரண்டு கோடுகளும் சென்று ஹெமிஸ்பியரில் முட்டிக்கொள்ளுமாம். ஆதலால் முக்கோணத்தின் உள்பாகை 180க்கும் குறைவாக இருக்கலாமாம். விளங்கிச்சு.

ஆக மொத்தத்தில் கணித பாடம் என்று சொல்லி சரித்திர பாடம் தான் எடுக்கிறார்கள்.

இந்த ஐன்ஸ்டைன், யூக்லீடியன் போன்றவர்களெல்லாம் மோசமானவர்கள்... இவர்களுக்கு வருகிறது என்பதற்காக நோண்டி எழுதிவைத்துவிட்டு போய்விட்டார்கள்.. நாம் அரியர் வாங்கிக்கொண்டிருக்கிறோம்...அரியர் கிளியர் செய்து , அமேரிக்கா வந்ததற்கு தண்டனையாக என் இத்துப்போன சமையலை நானே சாப்பிட வேண்டி இருக்கிறது...

இதை செய்வதற்கு பேசாமல் மாடு மேய்க்க போயிருக்கலாம்... மாடுகளை மேய விட்டுவிட்டு கண்ணில் பட்ட பெண்ணை சைட் அடித்து, கையில் கிடைத்த பழங்களை உண்டுவிட்டு, மல்லாக்க படுத்து, நட்சத்திரங்களை எண்ணி...

அடச்சீ.. மறுபடி கணக்கேவா... இந்த வெட்கங்கெட்ட மூளை மேய்ந்தால் புத்தகங்களைத்தான் மேய்வேன் என்று அடம்பிடிக்கிறது...

இறுதியாக‌ உங்களுக்கு நான் சொல்லிகொள்ள விழைவது யாதெனில், இனிமேல்  யாரிடமும் 'எனக்குன்னு ஒரு காலம் வரும்'என்று சொல்லாதீர்கள்.. அந்த காலம் வராமலே போகலாம்... அது அதை அவ்வப்போதே பைசல் பண்ணிவிடவேண்டும்..

கோதை - சுந்தர்

$
0
0
கோதை - சுந்தர்


கோதை ஆசிரியை - மாணவன் சுந்தர் விவகாரத்தில் சுந்தரின் தாய் பதிவு செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு கோதை - சுந்தர் இருவரையும் பிடித்து சிறையில் அடைத்திருக்கிறார்கள் போலீசார்.

முறையாக வீட்டிற்கு சொல்லாமல் சென்றதனால், சுந்தரின் தாய் கவலையின் பேரில் ஆட்கொணர்வு மனு செய்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. இல்லையெனில், சுந்தரின் தனிப்பட்ட துணை தேர்வில் அவர் உள்ளே நுழைய வேண்டியதில்லை. சுந்தருக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது ஆட்கொணர்வு மனுவுக்கு இன்னொரு காரணமாக இருக்கலாம். பிள்ளையிடமிருந்து நேரடியாக பதில் வராத போது, இது நியாயமே.

கோதையை ஏன் சிறையில் அடைத்தார்கள் என்பது புரியவில்லை. என்னதான் 18 வயது பூர்த்தியாகாத பையன் என்றாலும், விருப்பமுடன் தான் நடந்திருக்கிறது. யாரும் யாரையும் பலவந்தப்படுத்தவில்லை. அப்படியிருக்க சிறையில் ஏன் அடைக்க வேண்டும்? ஏதேனும் காப்பகத்தில் வைத்திருக்கலாமே?

"மாலை நேரத்து மயக்கம்"படத்தில் ஒரு காட்சி. திருமணமான நாளின் இரவில், நாயகனின் குறட்டையில் தூக்கம் வராமல் பாத்ரூமிற்குள் ஒண்டியும் தூங்க முடியாமல் திணறுவார் நாயகி. அமேரிக்காவில் நான் தங்கியிருக்கும் அறையை லீஸ் எடுத்திருக்கிறேன். உடன் தங்க சுலேகாவில் விளம்பரம் செய்திருந்தேன். ஒருவர் அழைத்திருந்தார். எல்லாம் பேசிவிட்டு மறக்காமல், "நீங்க குறட்டை விடுவீங்களா"என்று கேட்டேன்... "குறட்டையாலதான் பொண்டாட்டியே துரத்துறா"என்றார்.

25 வயதுகூட ஆகாத ஆண்கள் குறட்டையில் பின்னி எடுக்கிறார்கள். நான் கேப்ஜெமினியில் வேலை பார்த்தபோது ஒரு நண்பருடன் ஒரே அறையில் தங்க நேர்ந்தது. அப்போதுதான் சட்டையின்றி பனியனுடன் அவரை பார்த்தேன். சருமம் எங்கும் தேமல். அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதிர்ச்சியாக இருந்தது. வயது குறைந்த ஆண்களை பெண்கள் விரும்புவதற்கு ஒரு லாஜிக் இருப்பது போலத்தான் தெரிகிறது.

சிறைவாசம் ஒருவரின் கேரியரை மிகவும் பாதிக்கக்கூடியது. பின்னாளைக்கான முன்னேற்றங்களில் தடை ஏற்படுத்தக்கூடியது. கோதை ஏற்கனவே மணமானவர் அல்ல. ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர் என்றாலும் சுந்தரை ஏமாற்றியதாக கொள்ளலாம். அப்படியும் இல்லை. பிறகு எதற்கு சிறை வாசம்?

கேஸ் கொடுத்தாலே சிறைதான் முடிவா? இந்தியன் பீனல் கோடின் அடிப்படையிலேயே ஏதோ தவறு இருக்கிறது என்றுதான் நினைக்க வைக்கிறது.

அவர்களுக்குள் விரும்பியிருக்கிறார்கள்.  எதுவானாலும் அது அவர்களுடைய தனிப்பட்ட முடிவு தான். யாரும் குறுக்கிட அவசியமில்லை. அனுபவம் தனி நபர்களுக்கானது.  அதை எப்படி தேடவேண்டும், எந்த மார்க்கத்தில் தேட வேண்டும் என்பதையெல்லாம் தனி நபர்கள் முடிவு.

சுந்தர் தைரியமாக வீட்டில் சொல்லியிருக்கலாம் என்பது என் கருத்து. 18 வயதாக காத்திருந்து கோதையை மணந்திருக்கலாம். 18 வயது வரை காத்திருத்தலில், தங்களது காதல், மேம்போக்கான ஈர்ப்பின் மீது கட்டமைக்கப்பட்ட காதல் இல்லை என்று உலகத்துக்கு நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். அது தவறிவிட்டது.

ஓடிப்போய் மணம் செய்திருக்கவேண்டிய தேவையே இல்லை. நம்மை மீறி யாரால் என்ன செய்துவிட முடியும்? 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் நேரத்தில் ஓட்டம்!!. படிப்பு பாழ். வேலை வாய்ப்புக்களில் நிறைய சமரசங்களை செய்ய வேண்டி இருக்கும். அப்படியே படிப்பை தொடர்ந்து டிகிரி பெற்றாலும் தாமதம், பதவி உயர்வு, சம்பளப்படி உயர்வு, வெளி நாட்டு வேலை வாய்ப்புக்களில் பாதிக்கும். சுந்தர் வீட்டை பார்த்துக்கொள்ள, கோதை வேலைக்கு செல்லலாம். ஆனால், அதற்கு முதலில் கோதைக்கு வேலை வேண்டும். சிறைவாசம் என்பது வேலையைத்தானே முதலில் பாதிக்கிறது.  பொய் சொல்ல வேண்டிய தேவைகளை ஏன் உருவாக்கிக்கொள்ள வேண்டும்?

ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டதால் தங்களது காதல் புற ஈர்ப்பு அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. லேசாக முகம் சுளிக்க பார்த்தாலும் கூட, காதலை சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார்கள். இனி தான் சுந்தர் - கோதை மிகவும் எச்சரிக்கையாக கவனமாக இருக்கவேண்டும். எத்தனை சிக்கல் பாருங்கள்?

கேஸ் என்றால் சிறை என்பது போல காதல் என்றால் ஓட்டம் என்று ஏன் நம்மூரில் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தேவையற்ற சிக்கல்களை உருவாக்கிக்கொண்டு, வாழ்க்கையை மென்மேலும் கடினமாக்கிக்கொள்கிறார்கள். இது இறுதியில், இறைவன், மதம், போன்ற மொன்னை கற்பிதங்களுக்கும் பாவம் - புண்ணியம் போன்ற இருமைகளுக்கும் தான் இட்டுச்செல்லும்.

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர்....

$
0
0

இளவரசன், கோகுல்ராஜ் வரிசையில் இப்போது சங்கர்....


ஜாதிக்கொலைகள் நிகழ்த்துபவர்கள் அதற்கு சொல்லும் காரணம் "நீ காதலிச்சவனை விட நல்ல பையன் நம்ம ஜாதியிலேயே இருக்கான்"என்பதுதான். தங்கள் ஜாதி குறித்த உயர்வான எண்ணம் தான் அவர்களை இது போன்ற மொன்னை வாதங்களை முன்வைக்க வைக்கிறது. உண்மை என்னவென்றால்  நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகளில் பெரும்பான்மை ஒரே ஜாதிக்குள் நடந்த திருமணங்களே. "நல்ல பையன் ஜாதிக்குள்ளேயே இருந்தால் ஏன் விவாகரத்து என்று கோர்ட்டுக்கு வரவேண்டும்? முதல் திருமணத்திற்கு ஜாதியை மூச்சாக பார்ப்பவர்கள்,  ஏன் விவாகரத்துக்கு பிறகு மறுமணத்திற்கு ஜாதியே பார்ப்பதில்லை.. அப்போதும் ஜாதியையே கட்டிக்கொண்டு அழ வேண்டியது தானே?"அதை செய்ய முடியாது. ஏனென்றால், மறுமணம் என்பது ஜாதிக்குள் சாத்தியமில்லை. "கஷ்டமோ நஷ்டமோ சகித்துக்கொண்டு வாழு"என்பார்கள். மறுமணம் செய்து வாழவேண்டுமென்றால் ஜாதியை விட்டு வந்துதான் ஆகவேண்டும்..

இயற்கை எல்லா திறமைசாலிகளையும் ஒரே ஜாதிக்குள் அடைப்பதில்லை.

ஒவ்வொரு மனிதனிடமும் தனிச்சிறப்பான குணாதிசயங்கள் இருக்கின்றன. அதை புரிந்துகொள்ளக்கூடிய திறன் அல்லது தகுதி வாய்ந்த துணைகளே காலத்துக்கும் நீடிக்கின்றன. அதையெல்லாம் தூக்கி பரணில் போட்டுவிட்டு, எதிர் எதிர் துருவங்களை திருமணம் என்கிற பெயரில் நான்கு சுவற்றுக்குள் அடைப்பதால், கள்ளக்காதல்கள் தான் அதிகமாகின்றன.  கள்ளக்காதலில் சிக்கும் அத்தனை பேரையும் மறைமுகமாக அதற்குள் தள்ளிய பெருமை, அவர்களின் பெற்றோர்களின் ஜாதி உணர்வையே சாரும்.

ஜாதி என்கிற பெயரில் ரொம்பவும் கெடுபிடி செய்கிறவர்கள் தான் அதிகமாக கள்ளக்காதல்களை ஊக்குவிக்கிறார்கள். "வசதிக்கு தனியா ஒண்ணு வச்சிக்கோ"என்று காதை கடிக்கிறவர்களாக இருக்கிறார்கள். அதற்கு சமமாக, "புருஷன்னா சகலம்ன்னு அர்த்தம் இல்லை"என்று பெண்களுக்கும் ஓதப்படுகிறது. இப்படி ஓதப்படுவதையெல்லாம் 'சுதந்திரம், உரிமை, Breathing Space'என்று விதம் விதமாக பெயரிட்டு அழைத்துக்கொண்டாலும் உள்ளுக்குள் நடப்பது ஒன்றேதான். பொறுத்தமற்ற திருமணங்கள்.அதை நோக்கி தள்ளுவது 'ஜாதி'.

மொத்தத்தில் கணவன், மனைவி, குடும்பம் என்கிற அமைப்பின் மீது சேற்றை வாரி இரைப்பது ஜாதி ரீதியிலான கலாச்சார பாதுகாவலர்கள் தான். இவர்களுக்கெல்லாம் நிலமும், தங்கமும், ஒன்றுக்கும் உதவாத பணமும் எங்கும் போய்விடக்கூடாது. ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் ஜாதியின் பெயரால் 'உயர்ந்தவனாகவே'இருக்கவேண்டுமென்றால் ஏறி மிதிக்க தாழ்ந்தவன் என்று ஒருவன் வேண்டும் அல்லவா.

எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும், கொலைகள் நடந்தாலும் பெண்கள் தொடர்ந்து காதலின் பெயரால், ஜாதியை விட்டு வெளியேறுவது நடந்துகொண்டே தான் இருக்கிறது. அதற்கு காரணம், எத்தனைக்கெத்தனை ஜாதியின் பெயரால் ஒன்றும் செய்யாமலே உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்கிறார்களோ, அத்தனைக்கத்தனை அந்த பெண்களின் மனதில் அந்த ஜாதிக்காரர்களே கீழிறங்குகிறார்கள் என்று பொருள். எனக்கு தெரிந்து ஒரு பெண் வீட்டிற்கு பெண் பார்க்க வந்த பையன் ஏசி மெக்கானிக். வரதட்சணையாக ஐம்பது பவுனும், பைக்கும் கேட்டார்களாம். இன்னொரு பக்கம் அமேரிக்க மாப்பிள்ளை, நயா பைசா வாங்காமல், திருமணம் செய்வது நடக்கிறது. இப்படியிருந்தால் ஜாதி மீது பெண்களுக்கு எப்படி நல்லெண்ணம் வரும்? கிட்டத்தட்ட தன் குழியை தானே வெட்டிக்கொள்வது போலத்தான்.

இன்னொரு புறம் திருமண தளத்தில் தலித் என்றால் மத்த ஜாதிக்காரர்கள் முட்டாக ஒதுக்குகிறார்கள் என்றெல்லாம் இல்லை. நன்கு படித்த, ஐடி போன்ற துறைகளில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் வேலை செய்யும் தலித் ஆண் / பெண்ணை மற்ற ஜாதிக்காரர்கள் திருமணத்திற்கு அணுகுகிறார்கள் தான். தேவர், செட்டியார், பிராமின், ஐயர், முதலியார், நாடார், வெள்ளாளர், விஸ்வகர்மா, யாதவா, பிள்ளை, கெளண்டர், ரெட்டி, நாயுடு, கவார நாயுடு, நாயர், நம்பூதிரி என்று எந்த ஜாதிக்காரர்களும் விதிவிலக்கில்லை.

தன்னையொத்த பொருளாதார முன்னேற்றமும், சிந்தனா முறையும் வாழ்கை முறையும் அமையப்பெற்றிருந்தால், தாழ்ந்த ஜாதி, தலித் என்பதெல்லாம் ஒரு பொருட்டாக கொள்ளாமல் தலித் என்று தெரிந்தே பெண் எடுக்கிறார்கள், பெண் கொடுக்கவும் செய்கிறார்கள். ["அப்படித்தானே இருக்கவேண்டும்"என்று எவரேனும் சொல்லக்கூடும். நான் இதை சொன்னது, தலித் இனத்தவரை முட்டாக யாரும் புறக்கணிப்பதில்லை என்பதை நிறுவுவதற்குத்தான்.]

எப்படியாகினும், துணையை தேர்வு செய்தல் அவரவர் உரிமை தான் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை. பையனும் பெண்ணும் ஒருவருகொருவர் விரும்பிவிட்ட பிறகு, நடுவில் வர யாருக்கும் அனுமதியில்லை. உரிமையும் இல்லை. அவரவர்க்கு விருப்பமான வாழ்க்கையை வாழ அவரவர்க்கு உரிமை இருக்கிறது. அந்த காதலின் இலக்கு என்ன, நோக்கம் என்ன, அது உண்மையா பொய்யா, அது காதலா ஈர்ப்பா, அது எப்படி ஈடேறுகிறது,  லாப நட்டம் என்ன, வரவு செலவு என்ன என்பதெல்லாம் அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே. காதலின் தரம், உண்மைத்தன்மை, அதை செய்பவர்களிடம் தான் இருக்கிறது.

அப்படியிருக்க காதலர்களை வெட்டிப்போடுவது, வெட்டியவர்களை ஜாதியின் பாதுகாவலர்கள் என்றும் தியாகிகள் என்றும் அடையாளப்படுத்துவதெல்லாம் காட்டுமிராண்டித்தனம், குள்ள நரித்தனம், சர்வாதிகாரத்தனம்.

இப்படிச்செய்வது, மென்மேலும் அந்த ஜாதிக்குள்ளிருந்து பெண்களை ஓடவே வைக்கும். 2013ல் இளவரசன் விவகாரம் நடந்தது. இளவரசன் மரணத்திற்கு "வெட்டிப்போட்டால் தான் அடுத்தவர்களுக்கு பயம் வரும்"என்று ஜாதிக்காரர்கள் கர்ஜித்துக்கொண்டார்கள். அடுத்து கோகுல்ராஜ் மரணம் 2015ல். இப்போது 2016ல் சங்கர். இதெல்லாம் கொலை வரை போனதால் செய்தித்தாளில் இடம்பெற்றவை. கொலை வரை போகாதவைகளை கணக்கில் எடுத்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகும். இது சொல்வது என்னவென்றால், கொலை எவ்வித பயத்தையும் யாருக்கும் ஏற்படுத்தவில்லை. மாறாக, மென்மேலும் பெண்கள் ஜாதியை விட்டு வெளியேறுவதையே காட்டுகிறது.

ஜாதிக்காரர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வேட்டி கட்டினாலே ஆண் என்றெல்லாம் அர்த்தமில்லை. கட்டிய மனைவி, பெற்ற மகள், உடன் பிறந்த சகோதரி உங்கள் முதுகின் பின்னால் உங்களை மதிக்க வேண்டும். 'அவர்கள் மதிக்கிறார்கள் 'என்று நீங்களாக நினைத்துக்கொள்ளக்கூடாது. அதெல்லாம் ஒருவித மனோவியாதி. நல்ல மனநல மருத்துவராக பாருங்கள்.

"வசதிக்கு ஒன்னு வச்சுக்கோ"என்று சொல்பவர்கள் ஒரு பக்கம். அவர்களை எதிர்த்து காதலுக்காக உயிரையும் விடுபவர்கள் இன்னொரு பக்கம் என்று ரொம்ப ராவாகத்தான் இருக்கிறது நம் சமூகம்.




'நான்கு முட்டாள்கள்'

$
0
0
CyberPunk என்பது ஒரு இலக்கிய வகைமை. இது Speculative Fiction க்குள் தான் வருகிறது.. மின்னணு கணிணி பொறியியல் துறையின் அதீத வளர்ச்சியால் நிகழும்/ நிகழ்வதற்கு சாத்தியக்கூறுகளுடன் கூடிய கதைகளை இந்த முறையில் எழுதலாம்.

'நான்கு முட்டாள்கள்'என்று ஒரு கதை எழுதினேன்.. அதன் ஆங்கில மொழியாக்கம் இங்கே... Literary Yard ல் வெளியானது..




STORY: FOUR IDIOTS


By: Ram Prasath
fourIdiots
When Chithranjan Das, tored a page from the Calendar, it showed 23-Aug-2045.
‘Could there be someone like you, elsewhere in any planet or universe? Technology has gone to such a height, but you are still sticking to papers, notes and so on. Look at others, Das. Electronic Calendar itself manages bank accounts, controls refrigerator, AC, other bill payments. You are such an old man by your brains’ shouted Praneetha, Das’s wife.
Das was not at all bothered by her words. He wore his overcoat, shoes, and jacket and stepped out of the house, turned to his right and entered the railway station.
He took the lift and went to the first floor. A trunk, red in color was already on the rail with its mouth wide open. Das entered and sat in a seat and put on his seat belt. The Trunk closed its mouth.
In the rear view mirror, was seen a train running 300 kilometers per hour. There was a trunk, similar to the one; Das was seated in, on the back of the train. In a few minutes, with a little jerk, the train dropped off the trunk that it carried and picked up the trunk Das was seated in.
In 2045, the trains never stopped in stations, except that of the destination and source. I should say, the trains need not stop in any stations. So no time wasted in waiting to pick up passengers in stations.
At the station, where his office was located, Das got down from the trunk, took the lift and came out. He entered into his compartment and pressed a button and within seconds, he was at his seat in his office automatically. He thanked the virtual office system. If it was not it, he probably would have waited for a wagon, travelled another 30 minutes into the special economic zone and reached his cabin.
A pleasant walk on the road, shocking accidents, chirping of birds, road-side panipoori shops, trees, dew drops on the leaves, morning fog, barking street dogs, guys proposing to girls, men walking their dogs. Das counted on everything that he missed in 2045 that had a mention in books of 2010 that he used to read in his eBook reader in leisure.
Malcolm knocked the door and entered.
‘Malcolm, what are we to work on, today?’ said Das.
‘Four have been killed in a 100 floor apartment in Kodambakkam, last night. Ever since the murders happened, the Vikiserver didn’t let me sleep. Now I know why you didn’t connect your home with the server. You are a smart ass’ said Malcolm.
‘Let us don’t waste time. Come, let us go and discuss the case details on the way’ said Das.
Both boarded the detective agency wagon and soon, the wagon flew up in the air. The air traffic was very high on that day, but since the patrol line was different, the wagon that carried Das and Malcolm was flowing freely to the destination.
‘Four were killed at midnight, each at less than 2 minutes interval, in their apartments 496, 497, 486, 487. All four of them died because of a break in their neck. No finger prints left. All four of them were aged more than 40 and suffered problems in breathing which had them install breather device in their throat. This is what we know till now and the rest, are to be found by you in 4 hours Mr. Das’ said Malcolm.
‘What? Why four hours? This is homicide and should not I be given 8 hours? ’ said Das in curiosity.
‘Your home is not connected to the server Das. It’s been four hours since the murder. Ideally you should had commenced your investigation 4 hours earlier’ said Malcolm.
Wagon stopped at the ground floor of the apartment near the lift. Das and Malcolm got down from the wagon and took the lift and came to 98th floor. Das visited the four flats with Malcolm, one by one.
All four flats were neatly secured. Three among the four were loners while the fourth resident has a daughter who stayed at her college hostel when he was killed. Windows and doors of all four flats were locked from inside. Nothing was broken or mishandled. Everything was in place. Autopsy report clearly mentioned that, all four of them were murdered. The only opening to the flats were the ventilator ducts in the bathroom, which were of the size of a small apple. That ruled out the possibility of someone to have secured an entrance into the flats, in first place.
The building had 100 floors, 5 flats in each floor. From so many people living in all the 500 flats, whom to suspect? That too, the one who has entered into the four flats through that tiny ventilator in less than 2 minutes interval.
Two more hours have already gone, by then. He has only 2 hours left to find the culprit.
‘How do we progress further, Das?’ Malcolm asked.
‘All four murders have happened in less than 2 minutes gap between each. So the killer must had been able to reach out to all the four flats quickly. No one can enter the apartment from outside without a valid access. Therefore the culprit could only be an inmate. The server too has not showed any new immigrant in the last 24 hours. Therefore, if the flats, whose residents that were killed are, 496, 497, 486, 487 then the killer should had been somebody who stayed reachable to these flats. Which means someone from flats 491, 492, 493, 494, 495 should have done this whole thing. We will go ahead with the details of residents in flats 491, 492, 493, 494, 495 and narrow down the culprit Malcolm’ said Das.
Malcolm nodded in agreement. Das called up the Vikiserver and asked for the details of the residents of flats 491 through 495.
After 30 minutes of inquiry, Das took Malcolm to Flat 492.
The server informed the resident in Flat 492, John about the investigation, and opened the door automatically for Das and Malcolm. John greeted them and offered them seats. John’s room looked neat and tidy. There was not much of furniture in the room. There was hardly any book. There was a tread mill at a corner of the room. Das could relate that with John’s athletic physiq.
‘I hope you are aware about the murders happened last night. Can you tell me where you were, when the murder happened?’ asked Das.
‘I was sleeping in my room. I woke up minutes back and came to know of the murders through Viki’ said John.
Das noticed the machine that was kept by the side of John’s bed and inquired about it.
‘I lost my hand in an accident. I was treated with an electronic hand made of metal. That machine is the charger for the hand. Whenever I go to bed, I keep my hand in charger’ said John.
Das called up William, a robotics specialist. In front of John, Das and Malcolm, William inspected the machine.
‘I can certify that this one is manufactured by our company, The Malcolm Limbs but it cannot function on its own’ he said.
‘Why not? Has it got Bluetooth?’ asked Das.
‘Yes’
‘So can it connect automatically to the free wireless service for guests provided by this apartment?’
‘Yes, it can’
‘So can it download anything of its choice by itself?’
‘Yes, it can’
‘In that case, could it have downloaded the directives for killing someone from internet and executed the same?’
‘Do not go by your mind, detective. We should go by proofs’ said William.
‘All the windows and doors were locked from inside. The only way the killer could have secured his entrance into the flats was through that tiny ventilator. Obviously no man can enter through that tiny ventilator. But, this metal hand can go through it. The Viki could give us the required proofs’ saying so; Das ordered the Viki to display the list of downloads that has happened in the last 24 hours.
In the details displayed by the server, there were files for video games related to killing people by breaking their neck.
‘It could have happened. But, I was not the one who chose Bluetooth. I am a manufacturer and distributor. My only concern is to fulfill the service orders to the best possible quality and nothing more than that. I am only answerable if there was any fault in the machine or its charger or its functioning’ Malcolm said.
‘Mr. William, May I know which controlling organization inspects your products?’ asked Das.
Malcolm intervened at this and said,
‘Das, the government has already given away the rights to the private. Don’t you know that? We cannot ask this question?’
Das now turned to John.
‘There are software updates for all devices Das. The soft wares keep on updating from time to time and most machines nowadays come with Bluetooth enabled auto updating. Like the GPRS system that you have in your wagon? How can I be responsible for this? You know that. Don’t you?’ said John.
‘Give details about the one who wrote this stupid game software?’ Das commanded the Vikiserver.
‘Mr. Philip, a multimillionaire wrote this code but he died 4 years back’ Viki replied politely.
‘Damn!!’ Das uttered in frustration.
‘But Das, according to the basic three rules of human protection in robotics, a machine cannot harm a human being, right?’ asked Malcolm.
‘That is very right’ said John and William together.
‘It is true that the basic protection laws apply on all robotic products. But a rule can be misinterpreted and that was what has happened. All the four men who were killed were suffering from breathing problems and hence they had had artificial breather device installed in their neck. Nowhere in any directives, has it been written that, a robot should not harm a device. This robotic arm, though had not killed the victims directly but has indirectly done it, by breaking the device. The victims died of lack of oxygen because; the arm has broken down the devices. Breaking a device doesn’t not fit anywhere within the basic three rules of human protection Malcolm because a device is not human’ said Das.
‘But we never design the robots so carelessly. Normally before doing anything, all robots are designed to seek permission from the subject. Only after having gotten permission from the subject, can a robot do anything. Therefore, before breaking the breather device, the robot would have definitely asked permission from the victims’ said William.
John nodded at this.
‘How do you expect a response from a person who was in deep sleep, my dear William? Your arm might have asked permission. The victim might have been in deep sleep and therefore, would not have responded. Your arm might have interpreted his silence for yes. Has not it been the way, you programmers write code ever since the era of computers? Wait for 30 seconds and if there was no response, proceed to the next step with the default?’ Das asked.
Both John and William remained silent.
‘But Das, no one had a motive to kill them. No one had even a slightest idea about it. Now, how can we file an FIR against a machine? How can we get a machine,arrested and punished?’ asked Malcolm.
‘That’s the reason I stay away from machines’ said Das.
– Ramprasath.


வாவ் சிக்னல்

$
0
0
அமேரிக்காவின் Ohio மாகாணத்தில் உள்ள ரேடியோ Observatory யில் 1977ம் ஆண்டு, பேரண்டத்தின் ஒரு மூலையிலிருந்து செரிவான ரேடியோ சிக்னல் கிடைத்தது. ரேடியோ சிக்னல் என்பது தானாய் உருவாவதல்ல. அதை யாராவது உருவாக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

இந்த சிக்னலை முதன் முதலில் ரிக்கார்டு செய்தவர் அதை பீராய்ந்துவிட்டு அதனருகே  Wow என்று எழுதினார். அதனாலேயே அதை வாவ் சிக்னல் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.. சரி..அந்தக்கதையெல்லாம் எதற்கு?..'கிரகம்'என்று கதை எழுதிவிட்டபிறகு, இதை எழுதினேன். இதுவும் மிக பிடித்திருந்தது.

'Wow Signal'என்ற பெயரில் அந்த‌ குறுங்கதை  Literary Yard ல் வெளியாகியிருக்கிறது..படித்துப் பாருங்கள்...

STORY: WOW SIGNAL

By: Sri Ram
wife-husband
At the Colorado State University Radio Observatory, Polanski was keenly observing that part of the space, from where a Radio Observatory in Ohio had detected a Wow signal in 1977.
Polanski strongly believed that there must have been aliens in outer space and he was determined to have a finding in his credit, as he wanted to prove his Astro-physics skills to the world. Obsessed in this pursuit, he had even abandoned his home, forgot his wife too. According to him, he deserved a Nobel. In the last 10 years, he never missed even a single day to present himself at the Observatory, hearing all he could from outer space.
Even on that particular day, he kept listening to the silence of the outer space through his radio telescope. At around 12:13 AM , at midnight , when he was half asleep, the computer attached to his radio telescope, began to spurt out letters, symbols and numbers with a beep noise. Polanski immediately jumped off his seat in excitement. He routed those signals to his super computer to analyse the pattern of data..
While the super computer was analyzing the data, his heart beat heavily as he thought he had finally gotten something that would make his name remembered in the history of astrophysics.
When the super computer was all done, interpreting the signals, it finally wrote the transcription on the screen..
“If you don’t pay phone bills on time, I have no other choice except using your radio transmitter – Wife”.

இலக்கியமும் சிக்கலும்

$
0
0
இலக்கியமும் சிக்கலும்


இங்கே அமேரிக்காவில் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அனைத்து மாகாணங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு அவற்றில் உள்ள வசதிகளை பொறுத்து ஒரு எண் வழங்கிவிடுவார்கள். எந்த பள்ளிக்கு அதிக எண் இருக்கிறதோ அந்த பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க அலைமோதுவார்கள் பெற்றோர்கள்.

தங்கியிருக்கும் வீடு இருக்கும் அதே கவுன்டி என்றால் ஓகே. இல்லையெனில், அந்த பள்ளிக்கு தனியாக ஃபீஸ் கட்டவேண்டும். கணவன் மனைவி இருவருமாக சம்பாதிக்கும் குடும்பங்களில் இது பெரிய செலவு. வருடா வருடம் சென்னைக்கு பிள்ளைகள் சகிதமாக போய்வந்தால் சேமிப்பு மொத்தமும் காலியாகிவிடும் என்றஞ்சி பலர் இங்கே வந்ததோடு  பூர்வீகத்திற்கு கும்பிடு போட்டுவிடுவார்கள்.

அதை விடுங்கள்..ஒவ்வொரு பள்ளிக்கும் எண்கள் தருவதிலேயே எதில் வசதி இல்லையோ, அந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் வேலைக்காகாதவர்கள், அங்கே கற்கும் கல்வி படு மட்டம் என்கிற பிம்பம் கிடைத்துவிடுகிறதல்லவா?

நானெல்லாம் ராமகிருஷ்ணா பள்ளியில் தான் படித்தேன். நான் படித்துக்கொண்டிருந்தப்போது 2014ல் அமேரிக்கா வருவேன் என்று நினைத்து திட்டமிட்டு படிக்கவில்லை. அப்படி இருக்கையில் இந்த எண்கள் எல்லாம் தேவைதானா என்றொரு கேள்வி எழுகிறது. எல்லோரும் தங்கள் பிள்ளைகளை ஒரு பள்ளியில் சேர்த்தால், நாம் மட்டும் கொள்கை கொப்பளம் என்று வேறு பள்ளியிலா சேர்க்க முடியும்? நம்முடைய கொள்கைகளை பிள்ளையின் மீதா திணிப்பது? நாமும் அதே பள்ளியில் தான் சென்று சேர்க்க வேண்டும்.  ஊரோடு ஒத்து வாழ் என்பார்கள். என்ன செய்ய?

பெரும்பான்மை மனிதர்களின் போக்கில் தான் ஒரு நிலப்பரப்பு நகர முடியும்.

கல்வியை வியாபாரமாக்குவதெல்லாம் அமேரிக்க சிந்தனை தான். இப்போது நம்மூரில் பரவி வேறூன்றி இருக்கிறது. வீட்டுக்கு வீடு பொறியியல் வல்லுனர்கள் தான். தெருவுக்கு தெரு மருத்துவர்கள். எல்லாமே சிக்கலாகிக்கொண்டிருக்கிறது.

படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று எல்லோருமே ஒன்றே போலத்தான் செயல்படுகிறார்கள். என்ன படிக்கிறோம் என்று தெரிந்து படிக்காதவரை எதுவும் வீண்தான்.

இலக்கியம் மெத்த படித்தவர்கள் பலர், குடும்பத்தை காப்பாற்ற திராணியின்றி வறுமையில் மாண்டார்கள். பிற்பாடு இலக்கிய உலகம் பணம் திரட்டி அவர்தம் குடும்பங்களுக்கு உதவியது. இணையத்தில் கையேந்தும் இலக்கியவாதிகள் இருக்கிறார்கள். இத்தனைக்கும் நான்-லீனியர் எழுத்துமுறை குறித்தும் அதிலுள்ள கணித சமன்பாடுகள் குறித்தும் வண்டி வண்டியாக பேசுபவர்கள் தான்.

உங்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியவில்லை என்றால் மேலே உள்ள பாராவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். அப்படியும் புரியவில்லை என்றால் புரியும் வரை படியுங்கள்.

இலக்கிய உலகம் என்பதே ஒரு விதமான உளவியல் நோய்மை என்கிற ரீதியில் இருக்குமோ என்று ஐயப்பாடு வருகிறது. வாழ்க்கையை சிக்கலாக்கும் இலக்கியம் கட்டாயம் தேவைதானா என்கிற கேள்வி எழுகிறது.

உண்மையில் இலக்கியம் சிக்கலல்ல. இலக்கியம் எல்லோரும் அறியவேண்டிய ஒன்றுதான்.  இலக்கியத்தை கையாள்பவர்களே இலக்கிய உலகை சிக்கலாக்குகிறார்கள்.

குறுங்கதைக‌ள் - 4

$
0
0

Appollo  Mission ல் சந்திரனை சுற்றி வரும்போது, ஒரு கட்டத்தில் பூமியுடன் தொடர்பு அறுந்துவிடும். ஏனெனில், பூமியை சந்திரன் மறைத்துவிடும். Appollo Mission ல் சென்றவர்களுக்கு சந்திரனை சுற்றி வருகையில், ஒரு விதமான ஒலி கேட்டதாம். கிட்டத்தட்ட விண்கலத்தில் அமர்ந்திருந்த அத்தனை பேரும் கேட்டிருக்கிறார்கள்.

நாசா வழமைபோல கமுக்கமாக இந்த விஷயத்தை மூடி மறைத்துவிட்டது என்கிறார்கள். பூமி உருண்டை என்று சொல்லிய சாக்ரடீஸை விஷம் வைத்து கொன்ற அதிகாரம் நினைவுக்கு வருகிறது. எது எப்படியோ? ஒரு குறுங்கதைக்கு இது போதும்.


STORY: EERIE SOUNDS


By: Sri Ram
eeriesounds
While the Mars exploration space shuttle was on its way to Mars’s Orbital Path around the sun, Mark Webber was looking at the newspaper copies which featured his 5 year old son’s summer camp photos. He had brought it with him, to cherish the memories of his only son during the time he is stuck up in space. While looking at it, he could not miss to notice the news about refugees fleeing from Syria to neighboring countries and to the US had been briefly documented, next to that of his son’s.
Both, Mark Webber and Roger Smith, who were the only crew in NASA’s alien life exploration in Mars initiative, were keenly looking at the craters of Mars while the Space shuttle drifted slowly around it. The idea was to capture any and all, eerie sounds, that could have been by Aliens.
As the space shuttle came closer to the planet, their radio telescope received signals that exhibited strange but strong radio signals which they both captured in their computers.
“Mark, we must air this one to NASA” Roger said.
Mark thought for a moment and soon they got a message from Houston, if there was anything recorded.
Mark turned the mic on and relayed,
“No.Negative. No signals received so far” he said on the mic despite hand signs of Roger. Once the communication to Houston was cut, Roger asked,
“Why did you lied to Houston, Mark?”
“Back on earth, we humans need support and help from each other since civil war is on in some countries. Let us imagine, how much wealth would be wasted in terms of Search for Extra terrestrial life, if we let these signals escape to Earth? By a simple lie, we could turn that massive wealth to help the third nations” Mark said.

குறுங்கதைக‌ள் - 5

$
0
0
ஆங்கிலத்தை ஆங்கிலத்திலேயே சொல்லித்தொலைவோம்... என்ன மக்களே!?..சரிதானே

Gretchen Gales, Editor of Quail Bell Magazine for Unreal stories, has written to me saying, she has chosen one of my prose named "Curse" for publishing in her online Magazine.



Initiated byChristine Stoddard a writer, artist, and imaginative entrepreneur from Greater Washington, QuailBell is currently edited by Gretchen Gales, managing editor and staff writer for the magazine.

I will soon share the prose here once it is chosen and published in the online magazine.

குறுங்கதைகள் - 6

$
0
0

அமேரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி சுட்டு கொலை செய்யப்பட்டபோது தலையில் ஸ்கார்ஃப் கட்டிக்கொண்டு ஒரு பெண்மணி எவ்வித சலனமும் இன்றி பார்த்துக்கொண்டிருந்ததாக சொல்வார்கள். அந்த பெண்மணிக்கு "பபூஸ்கா பெண்மணி"என்று கூட பெயர் வைத்திருக்கிறார்கள் அமேரிக்கர்கள்.

நம்மூரில், ஆளவந்தார் கொலை வழக்கு 1950 களில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு. அது போல் இங்கே அமேரிக்காவில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு எலிஸா லாம் கொலை வழக்கு. ஆளவந்தார் வழக்கிலாவது இறுதியில் யார் கொன்றது என்பது தெரிந்தது. எலிஸா லாம் கொலை வழக்கில் கொலையாளி யாரென்றே தெரியவில்லை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்து சொல்கிறார்கள்.

எலிஸா லாம் ஒரு மனோதத்துவ மருத்துவர்.  நான்கு பரிமாணங்களை தாண்டிய பரிமாணங்களை உணர நேர்ந்ததால், ஏலியன்கள் அவளின் பூத உடலை விடுத்து, ஆன்மாவை தங்களுடன் அழைத்து சென்றிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

இன்று வரை முடியாத கேஸ் அது. ஒரு கதையில் வகையாக பயன்படுத்திக்கொண்டேன்.


STORY: CONFESSION


By: Sri Ram
hallucinations.jpg
“So you can’t come early today, post noon?” Rosy asked Roger, her sweet husband.
“Honey, I am going on business. I will be coming late in the evening. What do you want me to bring home, when I come back in the evening?” Roger asked as he held the wooden main door of the house, slightly open. He was to jump out to work anytime. Rosy didn’t seem to be in her elements, nor did she responded anything. She was calm, unresponsive and was staring the sky through the open window.
Roger has been observing Rosy, a bit different than usual these days. She has not been actively participating in anything as she used to be, before. Strangely, he has been observing her not sleeping at nights quite often, ignoring food, walking for hours in the hall thinking of something or the other, staring at empty sky for hours, yet not sharing anything when asked. Roger, simply chose to wait, for her to open up things to him by herself. After all that was the way, he has been brought up in the West. Therefore, he didn’t ask a question. But, right now, Roger didn’t had time to think on those as he was on an assignment that demanded his presence at Air Force Facility, Nevada, otherwise popularly known as Area 51.
Its the 5th year for him, serving for the nation’s research on extra terrestrial life .The facility now has an inmate, who has been arrested and has been charged of circulating news on abduction and torture by Aliens. Roger was to interrogate him to find the truth.
When he arrived at the facility everything was ready. The guy was sedated and was kept lying on the bed. Hypnotism was being carried out on him. With a glowing lamp, oscillating in front of his eyes, Roger shooted his first question.
“What do you see now?”
“They are here, all around us.”
“How do they look like?”
“They don’t have a shape. They don’t have a body. They choose people and get into them. They live within them”
“Why would they do that?”
“Fear”
“Fear on?”
“Extinction”
“There are no aliens around us” Roger said firmly.
“The Babushka lady, who took photographs when John F Kennedy was assassinated in 1963?!”
Roger didn’t had any answer. He kept silent and waited on him, to speak more.
“The Black Knight Satellite, caught in Space in 1960?! Mysterious Elisa Lam Death?!”
“What could the aliens, be doing right now?” Roger asked, in a rather random effort to divert the context.
“Anything. They are here. They are all around us. They could be watching the empty sky through a open window for hours, could be walking within the four walls for hours, could be staring at nothing for hours..”
Roger grew pale, as the inmate kept narrating his so called hallucinations.

குறுங்கதைகள் - 7

$
0
0
குறுங்கதைகள் - 7

அலுவல் நிமித்தம் Colorado சென்றிருக்கிறேன். ஆகாய மார்க்கமாகத்தான். விமானத்தில் Colorado வை நெருங்குகையிலேயே ஜன்னலினூடே வட்டவட்டமாக இட்லி மாதிரி தெரிந்தது.. வயல்களாகத்தான் இருக்குமென்று நினைத்துக்கொண்டேன்..  Crop Circles என்றழைக்கப்படும் பயிர் வட்டங்கள் பற்றி அமேரிக்கர்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது என்று தெரிந்துகொள்ளத்தோன்றியது. அமேரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த பெண்மணி ஒருவர் எங்கள் ப்ராஜெக்டில் இருக்கிறார்.

அவர் வாயை கிண்டினேன். "பயிர் வட்டங்களா? ஏரியா 51 ஆ? அங்கெல்லாம் ஸ்கொயர் ஃபீட் என்ன விலை"என்றார். பயிர் வட்டங்கள் பற்றியோ,  ஏரியா 51 பற்றியோ இங்கே யாருக்கும் எதுவும் தெரிவது போல் தெரியவில்லை.. அட!! அவ்வளவு ஏன்? எலிஸா லாம் பெயரையே தெரியாதவர்கள் கூட நிறைய இருக்கிறார்கள்..

அமேரிக்க மண்ணை பற்றி, அமேரிக்கர்களைவிட மற்ற தேசத்தவர்கள் குறிப்பாக மூன்றாம் தேசத்தவர்கள் அதிகம் தெரிந்துவைத்திருக்க விழைகிறார்கள் என்பது கண் கூடாக தெரிகிறது..

எப்படியோ? சும்மா ஒரு கதைக்காயிற்று...


STORY: CURSE

By: Sri Ram
cursed
The midnight looked ignited with slight snow outside, yet, Penelope could not sleep on her cot. She tried music for some time, Stephen King for some more, rose up from bed and walked within the four walls, and tried many such tricks yet, sleep was quite far from her. She thought, walking outside under the snow, would be something different to try. She wore her night suit and her slippers and instead of taking the hall-way, she opened her window and jumped out.
There was not much wind, which kept the temperature bearable. Penelope walked here and there on the lawn and even tried walking in bare foot to feel the wet grass. An owl stared her silently from a nearby tree. There was no one in the street and behind her home, was her father’s paddy field with densely grown crops. Penelope’s father Brando was a farmer in that part of the village in Colorado, where he lived. 24000 square feet of land was in his name and in all that, he has been farming for the last 10 years. He was a self-taught botanist and has been exporting paddy to some of the notable firms like Nestle.
Penelope was proud looking at her father’s achievement that spread across in front of her. Suddenly, out of nowhere from the dark sky, three balls of light descended slowly over the field. While Penelope watched them, with her eyes wide open in surprise, the balls of light began to move here and there, all over the paddy fields. The very scene of light hanging in the air and moving here and there on her father’s paddy field sounded mystical. Penelope ran into her home through the open window and pulled her father from deep sleep and took him to the attic at the 2nd floor.
As Penelope and Brando looked at, from the 2nd floor of their home, in just 20 minutes or so, the three balls of light suddenly stopped moving and arranged themselves in a triangular form and ascended rapidly at a speed, no man-made object has ever moved and vanished into the dark sky. In their paddy field, there seen a number of images, most of them circular, elliptical, hyperbolic and so on, made by bending the paddy crops.
“Father! We should call 911” Penelope said.
Brando, having given up or tired of trying to catch those lights in dark space, looked around in 360 degrees once, now turned to Penelope and said, “Pene, Looks like we are the only ones who have noticed this thing. Don’t even utter a word about this to anyone, you hear me?!”
“But why Father?” she asked. Much of her expressions in her face said that it was pure curiosity.
“Ours is a 24000 Square feet of fertile land, which is the only wealth that we got from our ancestors, Pene. Crop Circles are a curse to Colorado and the fucking aliens. If we tell this to the world, then our land will no longer be ours.” he added.

வேலூர், கேரளா, தலித்???

$
0
0
கேரளா, வேலூர், தலித்???


கேரளாவில் நர்சிங் படித்துக்கொண்டிருந்த தலித் பெண்ணை கற்பழித்திருக்கிறார்கள். முன்னதாக இதே கேரளாவில்  சட்டக்கல்லூரியில் படித்து வந்த தலித் மாணவி ஒருவர் கற்பழித்து கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலித் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை என்று சொல்லலாமா?

எனக்கு தெரிந்து ஒரு தலித் பையன். கையில் அமேரிக்க விசா. ஆனால், வாழ்க்கை என்றால் அது தன் ஜாதி பெண்ணுடன் தான் என்று பிடிவாதம் பிடிப்பவர். எங்கெங்கோ பெண் பார்த்திருக்கிறார். இவருக்கு பிடித்த பெண்கள் இவருக்கு ஓகே சொல்லவில்லை. வயது ஏறிக்கொண்டே போய் 33 தாண்ட, அப்பா அம்மாவின் சந்தோஷத்திற்காய், வேலூரை சேர்ந்த ஒரு தலித் பெண்ணுக்கு ஓகே சொல்லியிருக்கிறார். அந்த பெண் பங்களூரில் தங்கியிருந்தபடி டெக் மஹிந்திரா என்னும் ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பெண்ணின் நடவடிக்கையில் பையனுக்கு பொறி தட்டியிருக்கிறது. ஐடியில் பணி செய்யும் திறமையான பையன் அல்லவா?  அந்த தலித் பெண், தனது தலித் கணவன் வீட்டில் தலித் மாமனார், மாமியார் வீட்டில் வந்து அமர்ந்துகொண்டு வேற்று ஜாதி ஆண்களுடன் கிறக்கமாக கடலை போட்டுக்கொண்டிருக்கும் உண்மையை கண்டுபிடித்துவிட்டார். நம்பிக்கை போய்விட்டது. விவாகரத்து வழக்கு கோர்டில் இருக்கிறது. அந்த பெண் இப்போது டி.சி.எஸ்ஸில் தான் வேலை பார்க்கிறார்.

திறமையான தலித் ஆண்கள் மற்றும் பெண்களை அவர்களின் தலித் சமுதாயமே மட்டுப்படுத்தி, அவமானப்படுத்தி புறக்கணிப்பதாகத்தான் தெரிகிறது.  தலித் என்கிற தாழ்த்தப்ப‌ட்ட சமூகம் பன்னெடுங்காலமாய் கல்வி மறுக்கப்பட்டு , அறிவு ஒடுக்கப்பட்டு செக்கு மாடுகளாக, அடிமை வேலை செய்பவதற்காகவே மழுங்கடிக்கப்பட்ட ஒரு சமூகமாகவே இருக்கிற பின்னணியில், ஒரு பக்கம் இளவரசன் , கோகுல்ராஜ் போன்ற கல்விக்கான திறன்கள் ரத்தத்தில் ஊறி வரும் கொஞ்ச நஞ்ச தலித் இளைஞர்கள் காதல் என்கிற பெயரால் கொலைசெய்யப்பட்டுவிடுகையில், இன்னொரு பக்கம், இவர் போன்று நன்கு படித்து, பொருளாதார முன்னேற்றம் பெற்று, "பிற ஜாதிக்காரர்களுக்கு நாங்களும் சளைத்தவர்களல்ல.. வாய்ப்பு தந்தால் நாங்களும் சாதிப்போம்"என்று சாதித்துக்காட்டும் ஆண்களை அதே சமூகத்து பெண்கள் பிற ஜாதி ஆண்களுக்காய் விட்டுத்தருவதும், புறமுதுகில் குத்துவதும், ஏமாற்றுவதும், துரோகம் செய்வதும் நடக்கிறதுதான்.

தலித் சமுதாயம் ஒரு பக்கம், உரிமைகள் மறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, இழிவாக நடத்தப்படுவதும், மறுபக்கம் தலித் சமூகம் தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொள்வதும், தன் சமூகத்தையே அவமரியாதை செய்துகொள்வதும் , தன் சமூகத்தையே புறக்கணிப்பதும் நடக்கிறது.

ஒரு பக்கம் அரசு, தலித் சமூக மக்கள் சமூக நிலைகளில் உயர வேண்டும் என்று இடஒதுக்கீடுகள் சலுகைகள் என்று வெகு ஜன மக்களில் கடுமையான எதிர்ப்புக்கிடையில் முயற்சிகள் எடுத்து வந்தால், மறுபக்கம், அந்த இடஒதுக்கீட்டையும், சலுகைகளையும் பயன்படுத்திக்கொள்ளும் தலித் சமூக மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து விட்ட பின்னர், தலித்சமூக மக்களை புறக்கணிப்பதும், தங்களை தொடர்ந்து மட்டுப்படுத்தும் பிற ஜாதி மக்களுடன் குடும்ப உறவுகளை உருவாக்கியும், சுய ஜாதி அழிப்பை முன்னெடுப்பதும், தலித் சமூகத்தை மென்மேலும் பலவீனப்படுத்துவதும் நடக்கிறது தான்.

இப்படி செயல்படும் ஒரு ஜாதி மீது பிற ஜாதிக்காரர்களுக்கு எப்படி மதிப்பு வரும்? பிற ஜாதிக்காரர்களை விடுங்கள். தலித் ஜாதிக்குள் இருப்பவர்களுக்கு தலித் ஜாதி மக்கள் மீது எப்படி நல்லெண்ணம் வரும்? நன்மதிப்பு வரும்?

தலித் இளைஞர்களும் , இளைஞிகளும் பிற ஜாதி ஆன், பெண்களுடன் வளர்கையில், தங்களையும் அவர்களுக்கு சமமாகவே நினைத்துக்கொள்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது. அது உண்மைதான். ஆனால் நம் சமூகம் அப்படி சமமாக நடத்துவதில்லையே. மற்ற ஜாதிக்காரர்கள் பத்து பன்னிரண்டாவது தலைமுறையாக படித்தவர்களாக இருப்பார்கள் . தலித் சமூகத்தில் பெரும்பாலும் இப்போதிருக்கும் தலைமுறையே கல்வி கற்ற தலைமுறையாக மேலெழும்பி வர முயற்சித்துக்கொண்டிருக்கிறது என்கிற உண்மை இன்றைய தலித் ஆண், பெண்களுக்கே புரிந்திருப்பது போல் தோன்றவில்லை.

32 வயதுடைய  அமேரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஐடியில் வேலை பார்க்கும் தலித் பெண்கள் பெரும்பாலும்   வேற்று ஜாதி ஆண்களுக்கே முக்கியத்துவம் தருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த பின்னணியில் , தலித் மக்களின் முன்னேற்றத்துக்கென அரசாங்கம் தரும் இடஒதுக்கீடு, சலுகை என்பதன் இலக்கு அல்லது நோக்கம் என்ன என்பதில் மிகப்பெரிய குழப்பம் இக்காலகட்டத்தில் நிலவுகிறது.


அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு பின் சமூக கட்டமைப்பு குறிந்த பார்வையும் ஆழ்ந்த புரிதலும் நிச்சயமாக இருக்கின்றன. அது வரவேற்கத்தக்க ஒன்று,

ஆனால், அரசு தரும் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளும் தலித் இன மக்களுக்கிடையில் சமூக கட்டமைப்பு குறிந்த பார்வையும் ஆழ்ந்த புரிதலும் இருப்பது போல் தெரியவில்லை. மாறாக, அவர்களின் சமூகத்திற்க்கு அவர்களே குழிவெட்டுவது போலத்தான் இருக்கிறது.

குலைக்கிற நாய்

$
0
0
குலைக்கிற நாய்



இப்போது வடபழனி சிக்னல் அருகே SRM கல்லூரியின் அலுவலகம் மற்றும் மருத்துவமனை இயங்கும் கட்டிடங்கள் அப்போது TCS லீசில் இருந்தது. நான் TCS சேர்ந்த‌போது அங்கேதான் முதல் ப்ராஜெக்ட் தந்தார்கள். இன்ஷூரன்ஸ் என்று நினைக்கிறேன்.

அப்போது தெரிந்தவர்கள் சிலருக்கு Java கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தேன். அவர்கள் குறுஞ்செய்தியில் சந்தேகம் கேட்பதும் அதற்கு நான் பதில் சொல்வதுமாக இருப்பேன். எல்லாம் நாம் கற்ற வித்தை மற்றவர்களுக்கு பயன்படட்டும் என்றுதான்.

அங்கே சென்று சேர்ந்ததும் என்னை ஏற இறங்க பார்ததுவிட்டு, நான் தொடர்ச்சியாக குறுஞ்செய்தி அனுப்பவதையும் கவனித்துவிட்டு, அவர்களுக்குள்ளாக ஒரு கணக்கு போட்டுவிட்டு,  என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. எனக்கு ஏகப்பட்ட girl friend இருப்பதாக முடிவே செய்துவிட்டார்கள்.

உண்மையில் நான் ஒரு உதறல் கேஸ்.. 12த் வரை ராமகிரருஷ்ணா ஆண்கள் பள்ளியில் தான் படித்தேன். ஆண்களுடனேயே வளர்ந்ததால் பெண்களுடன் பேசி பழக்கமே இல்லை. 12 வரை நான் பேசிய இரண்டு பெண்கள் என் அம்மா, என் தங்கை. பெண்களுடன் பேசுவது என்றாலே அப்போதெல்லாம் நாக்கு தந்தி அடிக்க ஆரம்பித்துவிடும். இது ஏதேனும் ஃபோபியாவா தெரியவில்லை. ஃப்ராய்டை கேட்டால் சில பெயர்கள் சிக்கலாம்.

ஆனால், நம்மில் எல்லாருக்குமே மனதோரம், நம்மை இந்த பக்கம் நான்கு பெண்களும் அந்த பக்கம் நான்கு பெண்களும் சூழ கொண்டாட ஆசை இருக்கும் தானே. நமக்குள் தினம் தினம் நமக்கு பிடித்த பெண்கள் நம்மை கொண்டாடுவது போலத்தானே கற்பனை செய்துகொள்வோம். பதின்ம வயதில் இதை சொல்லவா வேண்டும்? நிஜத்தில் நடக்க வாய்ப்பில்லை என்பதால் நம்மை அப்படியே மன்மதன் போல் எந்த குதிரையையும் அடக்கி சவாரி செய்யும் ஜாக்கி போலத்தானே கற்பனை செய்வோம்.

அப்படி ஒரு உதறல் கேஸாக இருந்த என்னை அவர்கள், மன்மதன் ரேஞ்சுக்கு பேசத்துவங்க, அதுவரை கண்ட கற்பனைகளுக்கு ஒரு வடிவம் கிடைக்க துவங்க, சும்மா தானே என்று நானும் அதை உள்ளூர ரசிக்கத்துவங்க, செம ஜாலி தான்.

இத்தனைக்கும் யார் அந்த பெண் என்று அவர்களுள் யாரும் இறுதிவரை எந்த கேள்வியும் எழுப்பாமலேயே என்னை ஒரு மன்மதன் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்க, முதலில் உள்ளூர ரசித்தவன், பிறகு போதை அதிகமாகி, ஜுரம் என்று லீவு போட்டால் கூட அடுத்த நாள் போய், "கேர்ல் பிரண்டுடன் டேட் போயிருந்தேன்"என்று பந்தா பண்ண ஆரம்பித்தேன்.

அவ்வளவுதான்!!

காதலுக்கு என்னை என்சைக்லோபீடியா ஆக்கிவிட்டார்கள். அதிகம் பேச நேர்ந்தால் எங்கே குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று அவர்கள் என்ன பேசினாலும் கேட்டுக்கொள்வதோடு சரி. அதிகம் போனால் ஒரு புன்னகை.

அதாவது இதெல்லாம் எனக்கு தூசாம். பெண்கள் விஷயத்தில் நான் பலே கில்லாடியாம். அப்படி ஒரு பில்டப்.

நான் திறமையாக சமாளித்தேனா அல்லது அவர்கள் ஒரு மொன்னையா தெரியவில்லை. நம்பிவிட்டார்கள். அவ்வளவுதான். வெறுங்கையை மூடியே வைத்தால் என்னமோ இருக்கிறது என்று தோன்றுமே. அதுபோல மெளனமாக அதிகம் பேசாமல் ஒரு ஞானி ரேஞ்சுக்கு  அவர்கள் பேச்சுக்கு புன்னகைப்பதும், அப்படியே ஏதேனும் பேச நேர்ந்தாலும் ஒரு கைதேர்ந்தவன் போல தத்துவார்த்தமாக "உன் வேலையை நீ பாரு.. பொண்ணு தானா வரும்"என்றெல்லாம் ரஜினி பட டயலாக்குகளையே வெவ்வேறு மாடுலேஷன்களில் சொல்லி ஒரு இரண்டு வருடத்தை தள்ளினேன்.

கடைசிவரை குட்டு வெளிப்படவே இல்லை. இரண்டாம் வருடத்தின் முடிவில், லண்டன் செல்ல விசா கிடைத்தது. உண்மையை சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். அதுவரை கட்டிக்காத்த இமேஜ் சட்டென போய்விட்டால்!! அதனால் சொல்லவே இல்லை. ஆனால் அப்போதைக்கு அது எபிசோட் 1 தான் என்று தெரியாது.

என்னுடன் வேலை செய்த ஒருவரும் லண்டன் வந்தார். அவரிடமும் வண்டி வண்டியாக பில்டப் கொடுத்து வைத்திருந்தேன். அவர் என்னை விட கேனையா தெரியவில்லை. அவரும் யார் அந்த பெண்கள் என்று கேள்வி கேட்காமலேயே நம்பிவிட்டார். நம்பியதோடு நிற்காமல் லண்டனில் புதிய நண்பர்களிடத்தும் அதே பாட்டை பாட ஆரம்பித்துவிட்டார். விளம்பரம் தானே கிடைக்கும் போது ஏன் தடுக்க வேண்டும்!! அவ்வளவுதான். எபிசோட் 2. துவங்கியது. எந்த பிரச்சனையும் வரவில்லை என்பதால், என் வெட்டி அரிதாரத்தை நான் கலைக்கவே இல்லை. அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.லண்டனில் தங்கியிருந்த போதும் நண்பர்கள் மத்தியில் இதே இமேஜ் தான். சின்ன புகழ். அடுத்தவர்களின் கவனம் நம் மீது விழுவதை உள்ளூர ரசிப்பது. ஏதோ வயதுக்கோளாறு.

தளத்தில் குட்டி காதன் மன்னன் என்று ஒரு இமேஜ் வேறு. ஒரே பாப்புலாரிட்டி தான். கேண்டீன் போனால் திரும்பி பார்ப்பார்கள். ஹலோ சொல்வார்கள். டிரஸ் சூப்பர் என்பார்க‌ள். பெண்களை approach செய்ய ஐடியா கேட்ப்பார்கள். "சொல்லித்தெரிவதில்லை மன்மதகலை"என்றெல்லாம் மறுபடி கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக பதில் தந்தே எஸ்கேப் ஆனேன்.  இத்தனைக்கும் girl friend வைத்திருக்கும் பலர் செய்யும் ஜிம்மிக்ஸ்களான,  ஒரு நாள் girl friend  இடுப்பில் கைப்போட்டு கூட்டி வந்து நண்பர்களிடம் காட்டி நண்பர்களை வெறுப்பேற்றுவது, நண்பர்களுடன் வெளியே செல்கையில் தனியே ரூம் போடுவது என்று எதையுமே நான் செய்திருக்கவில்லை (இருந்தால் தானே இதெல்லாம் செய்ய) எனும்போது அவர்கள் எப்படி நம்பினார்கள் என்பது தான் உச்சகட்ட ஆச்சர்யம்.

 ஏதாவது பேசினால் வாயையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். லீவு போட்டால் அடுத்த நாள் என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள அவர்கள் செய்யும் ஜிம்மிக்ஸ்களை பார்த்தால் செமையாக சிரிப்பு வரும். உள்ளுக்குள் ரசித்துகொண்டே கம்மென்று உட்கார்ந்திருப்பேன். பெண்கள் விஷயத்தில் ஒரு உதறல் கேஸாக இருந்துகொண்டு, இரண்டு வருடங்கள், 'காதல் மன்னன்'ஆக கொஞ்சம் புகழோடு தெனாவட்டாக திரிந்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

அப்போது மேஸேஜ் அனுப்பியது எனது உறவில் ஒரு தங்கை. இப்போது அவர் ஒரு கணிணி நிறுவனத்தில் கணிணி பொறியாளராக வேலையில் இருக்கிறார்.

உண்மையில் நான் ரொம்ப Introvert.. நான் பணிபுரியும் பணிபுரிந்த இடங்களில் என்னை யார் என்றே தெரியாதவர்கள் அனேகம். பெரும்பாலும் நான் தனியனாகவே தான் இருந்திருக்கிறேன். நான் வேலை செய்யும் தளத்தில் ஒரு பத்து குழுக்கள் இருந்தால், நான் எந்த குழுவிலும் சேராதவனாகவே இருந்திருப்பேன். இப்போது அமேரிக்காவிலும் அதே கதை தான். என் அலுவலகத்தில் சற்றேரக்குறைய ஒரு 70 இந்தியர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் சொற்பம். ஒன்றிரண்டு பேரை தவிர ஏனைய யாரையும் எனக்கும் தெரியாது, அவர்களுக்கு என்னையும் தெரியாது. என்னை பொறுத்த மட்டில் அதற்கு நியாயமான காரணங்கள் இருந்திருக்கின்றன‌. காரணங்களுள் சில சமூக பிரச்சனைகள் சார்ந்தது. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், புறக்கணிக்கப்படுவதின் மீது பயம். அச்சம். அவ்வளவுதான்.

பாதகமாக ஏதுமில்லை. எந்த பெண்ணின் பெயரையும் கெடுக்கவில்லை. யாரையும் முன்னிருத்தி அசிங்கப்படுத்தவில்லை. சாதுரியமாக மெளனம் சாதிக்க வேண்டிய இடத்தில் மெளனமாக இருந்துவிட்டேன். மற்றதை அவர்களே பார்த்துக்கொண்டார்கள்.

கிசுகிசு பேச எல்லோருக்கும் ஒரு ஆர்வம் இருக்கிறது. பணி நேரத்தில், பணி சுமையை இறக்கி வைக்க, ரிலாக்ஸ் செய்ய , நட்பு வளர்க்க, கிண்டல் கேலி செய்ய, வம்பிழுக்க என கிசுகிசுவுக்கு பற்பல பயன்பாடுகள் இருக்கின்றன. வாய்க்கு அவலாக ஏதேனும் தேவைப்படுகிறது. உள்ளிருக்கும் குப்பை கசடுகளை வெளியேற்ற இந்த கிசுகிசு பயன்படுகிறது. கிசுகிசுக்கப்படுவதில் உள்ள போதை என்ன என்பதை தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பு கிட்டியது.

என்னிடம் உள்ள எது அவர்களை அப்படி நினைக்க வைத்தது என்பது இப்போதும் எனக்கு புரியாத புதிர் தான். இப்படி 'மன்மதன் அம்பு'போல் கிசுகிசுக்கப்பட்ட நேரத்தில் 70 சிறுகதைகளும் எண்ணற்ற கவிதைகளும் தான் எழுதியிருந்தேன் என்பது தான் உண்மை. இத்தனைக்கும் அப்போது நாள் ஒன்றுக்கு 12 முதல் 14 மணி நேரம் அலுவலக பணி வேறு இருக்கும். அந்த நான்கு வருட காலத்தில் கிசுகிசு என்பது எத்தனை போலித்தனமானது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்துகொண்டிருக்கிறேன். ஆதலால் கேட்கும் கிசுகிசு எதையும் நம்புவதே இல்லை.

மாறாக கிசுகிசுக்கப்படும் நபர் டெக்னிக்கலாக என்ன செய்துகொண்டிருக்கிறார், அந்த வேலையை செய்ய ஒருவருக்கு எத்தனை நேரம் எடுக்கும் என்பன போன்ற விவரங்களை ஆராய்வதுதான் உண்மையை கண்டுபிடிக்க சரியான அணுகுமுறை என்பதை அனுபவ ரீதியாக கற்றுக்கொண்டேன்.

ஒரு விஷயம் நிச்சயம். என்னை பற்றி கிசுகிசு இனிமேலும் சொல்ல யாராலும் முடியாது. ஏதாவது தெரிந்தால் தானே கிசுகிசுக்க. குலைக்கிற நாய் கடிக்காது ஐயா. கடிக்கிற நாய்க்கு பற்களும், முன்னங்கால்களும் Strong ஆக இருந்தே தீரும்...

24

$
0
0
24

காலப்பயணம் பற்றிய படம் என்று சொன்னார்கள். படம் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. காரணம் ரொம்ப சிம்பிள். தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக ஒண்டி, மிகப்பல கஷ்டங்கள் அனுபவித்து, சினிமாவுக்கு பங்களிக்கும் உயரம் வளர்தலுக்கு தமிழ் சூழலுக்கே உரிய முறையில் மிகப்பல‌ சிக்கல்கள் இருக்கின்றன. .. போகட்டும்...


Time Travel பற்றி நான் எழுதிய கதை ஒன்று சமீபத்தில் Literary Yard லும், QuailBell Magazine நிலும் வெளியாக தேர்வாகியிருக்கிறது.

கதை இதோ.

STORY: WARP

By: Sri Ram
warp
The two capsules, 6 feet long and 2 feet wide, kept next to each other, on the floor of the advanced cryostasis chamber were open already. Marks of wet footsteps on the floor ran from the tail of the capsules to the window. With time they were to slowly smudge. At the window, Mark and Lisi, saw, their space ship awaited for them, at the foot of a huge hill, on the solid rocks of planet BB143, several light years away from the earth-like planet, Kepler 22ZA.
The planet BB143 was cold, dry and dissolute. Light from its host star brightened the surface of the planet. Storms of dust that ran all over the surface from time to time, kept its sky almost dark. Outside the cryostasis chamber, awaited a thick layer of carbon di oxide to fill their lungs and kill their brains. The distant mountains and hills were mere iron oxides and the soil, red in color was nothing but rust.
Light, from the host star, the only source of energy illuminated that side of the planet so bright during the day. The cryostasis chamber’s array of solar cells harvested the bright hot source, whose veins were plugged into the chamber. These veins energized the chamber all through the SOL days and nights. The Dust often fell over on the solar cells but was wiped off by the storms regularly.
“Something is terribly wrong!” Mark said. His voice trembled. He appeared to have been feeling guilty of lost something. He seemed to have not been impacted much by the relatively shorter cryosleep, that he woken up from.
“How terrible?” Lisi asked. One could see a fresh look of panic on her face, as she looked through the window. Outside, the very sight of the ferocious storm threatened her. It was not so fierce, the moment, they landed on the planet, as she recalled. The storm was strong enough to wrench the chamber from time to time.
“Terrible to the extent, we have to abort the mission any time from now” Mark wore his space suit again while Lisi still looked outside through the window. She wore only a cryosleep apron. Though she was now completely away from the capsules, there were still a few sensors that stuck to her body through the apron.
“You stay in. Better get your ass inside the suit. We may have to go elsewhere.” Mark opened the latch, stepped into the outer chamber and closed the latch. Moments later, Lisi saw him, open the outer chamber latch, stepped out and walked here and there. He even jumped quite high couple of times on the red rusty soil of the planet. Lisi wondered, how he was able to jump that high.
Lisi took a report of the duration of cryosleep, that she woken up from. The figures on the report could be related. Lisi, checked out the status of oxygen in her suit. Having found it lesser, she re-filled oxygen removed the sensors and apron and wore her space suit. It stuck on her wet skin and it made her feel good. She folded the apron and kept it on the capsules with the sensors on the apron. The report showed accurate data on the duration of time spent on cryosleep. There were no fluctuations or ambiguity on the figures. She went through it again and again. Still no part of the report raised her eye brow.
Moments later, Mark entered the chamber and sealed it behind. He then waited for the chamber to announce ‘pressure stabilized’. He looked confused, preoccupied and kind of lost in thoughts.
“Would you tell me, what is going on? Has Kepler 22AZ survived the comet collision?” Lisi asked.
“No. Time! It’s been fucked up” he said.
“What? But the report is fine on the figures”
“Gravity! It’s been fucked up Lisi, when we were in cryosleep. We could not have observed. Didn’t you notice the change in gravity? We need to re-compute the data” Mark said, while he sat on the computer. He quickly turned on the feeds from the geo-stationary satellite, the Observer, that held itself 400 miles above the surface of the planet in space facing the southern hemisphere of the planet BB143 took images at regular intervals and relayed. The received images from the geo-stationary satellite showed the rock mass of planet BB143 steadily disintegrating into tiny chunks of sand and dust that continuously escaped into space. What made it to happen, was beyond their knowledge of space and astrophysics to understand and was something they both wanted the scientists, theoretical physicist, cosmologist on Earth to find out, first thing as it has now become an obstacle in their plan of colonizing the next Earth-like planet Kepler 22AZ. The best that they could do, was to leave behind notes to space stations, so that, the reasons behind such an event, could be researched later.
In space, the escaping chunks of sand and dust could form a belt around the planet. If they could attract one another, they could form into a moon or a meteor or a comet or a planet. A planet could gain more mass by attracting other floating smaller rocks and dusts. That Mass could eventually warp. That could bring gravity and that will dilate time. Space is all that stupid thing. Forming and deforming in cyclic process. One thing to another and so on. Nothing gets wasted. Everything balances every other thing. Nothing is stable. Energy is Immutable!
Lisi looked at the gravity data from the computer. The Gravity had nearly halved. Now she understood the whole mess.
“We are lucky that the rock mass, that holds the foundation of this chamber has not given up yet. We must have woken up much earlier then” she said, with her eyes transfixed at the numeric figures on the computer.
“To be more precise, if we had woken up at the right time it was according to the old gravity data. With the new gravity data, I think, we have woken up much earlier.” Mark said while allowing the computer to initiate certain assembly codes. The computer performed numerous calculations on the screen. Mark and Lisi waited as the computer digested zillions of computational cycles. Outside the chamber, through the window dust storm moved here and there, appeared and disappeared periodically. Some of them were weak while some of them were strong and took longer time to go thin in the air. After considerably longer time, the computer spurted all the results throughout the 17 inches monitor without leaving an inch of space on the screen.
Looking curiously into the data on the screen, Mark said,
“Yes. We have woken up much earlier. According to the old gravity data, an hour here was equivalent to several years in Kepler 22AZ, so the short cryosleep duration in months we set initially was just enough for the mission. By the end of it, Kepler 22AZ would have already undergone the much anticipated comet collision and would have cooled down and would have been in a condition to support life of the living cells that we would deploy to colonize it. But gravity is fucked up now. With the new gravity data, the cryosleep duration extends to a few SOL years, which means, we have woken up much earlier.”
“But the capsules we have here, will support us in cryosleep not more than few SOL months, Mark” Lisi said.
“Yes. That is a problem. This planet with the new gravity will not help us with our mission. Eventually all this might be sucked in. We need to spend the remaining cryosleep time elsewhere in a planet that has time dilation, more or less the same as that of BB143 before gravity change. This is now, our plan A” mark said thoughtfully.
“Do we have a plan B?” Lisi asked.
“Until we arrive at a plan B, plan A is plan B” Mark said.
“But there was no mention of gravity loss, anywhere in the catalog” Lisi said.
“Catalog! That big junk book must have been obsolete by now. Not sure why do we still have it. Space is a den of uncertainty. It is so unpredictable and with us in it, it changes” Mark said. His voice glazed with disappointment. He thought for a while and then
“Let us find a planet whose gravity could dilate time with Kepler 22AZ and progress with our mission. That’s an order” he said.
Lisi received the command and the computer began to respond to her queries. Upon her command, the computer searched among the planets that were identified, the one planet that had gravity the same as BB143 before gravity change.
Moments later,
“I have found one from the list of prospective planets that we had already.” Lisi shrieked aloud.
Mark drew himself to her seat impetuously and together they looked into Lisi’s computer terminal.
“Kepler G160 looks stable and appropriate for our needs. Its gravity would allow us to hibernate until Kepler 22AZ recovers from collision and cool off” she said.
“Though not very far, it would take a while for us to reach that planet. We also would have to carry these cryostasis capsules in our ship” he said.
“Obviously!!” she replied.
The two capsules were there side by side. One of which had Lisi’s apron with sensors. Outside, the storm seemed to have gained strength. The chamber wobbled as the storms actively roamed all around. Time! It was now not in favor of their purpose. They together chose to choose a favorable time. They together waited for the ferocious storm to fade away. Even to choose a favorable time, you have to wait for the right time.

வேலை

$
0
0
வேலை


"திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லலாமா?"என்று கேட்டார் தோழி ஒருவர்.

"உங்களுக்கோ, உங்கள் குடும்பத்துக்கோ தேவைப்பட்டால் தயவுசெய்து செல்லுங்கள்"என்றேன்.

'இதெல்லாம் ஏன் கேட்கிறார்? அது அவர் உரிமை'என்றெல்லாம் பேச வேண்டியதில்லை. வேலை என்பது குடும்பத்தின் தேவைகளையும், கணவன் மனைவி என்கிற இரு மனிதர்களின் விருப்பங்களையும் பொறுத்தது. இன்னதுதான் சரி, இன்னது தவறு என்றெல்லாம் பொதுப்படையாக சொல்லிவிட முடியாது.

பல குடும்பங்களில், கணவனிடமிருந்தும், மாமியார் நாத்தனார்களிடமிருந்தும் தப்பிக்கவே பெண்கள் வேலையில் சென்று ஒதுங்க நேரிடுகிறது. சேமிப்பையும், குடும்பத் தேவைகளையும் காரணம் காட்டி, குண்டான் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல், சதா நான்கு சுவற்றுக்குள் பெண்களை அடைத்து வைப்பதே குடும்பத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதுதான்.

பெண்களும் வேலைக்கு செல்வதால் சில நன்மைகள் இருக்கின்றன.

வாழ்க்கை பற்றி அவர்களுக்கும் ஒரு புரிதல் இருக்கும். எந்த பிரச்சனையிலும் அவரிடமிருந்தும் கூடுதலாக கருத்துக்களை பெற முடியும். ஒண்டி ஆளாக ஆணே மண்டையை குடாய்ந்து பி.பி ஏற்றிக்கொள்ள வேண்டி இல்லை. ஆண் விட்ட இடத்தில் பெண் பிடித்துவிடலாம். அது ஒட்டுமொத்தமாக குடும்பத்தின் பயணத்தை சுலபமாக்கும். எந்த விஷயத்திலும் ஆணுக்கு ஒரு கோணம் இருப்பது போல் பெண்ணுக்கும் இருக்கலாம். அந்த கோணங்கள் தெரிந்தால், எதையும் மேலதிகமாக புரிந்துகொள்ள முடியும்.

கணவனுக்கு மனைவிக்கும் பூசல்கள் வர மிகப்பல வாய்ப்பிருக்கிறது, மனைவியை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்தால், முன் தினம் நடந்த பூசலை பற்றியே யோசித்து, அதையே வெவ்வேறு கோணத்தில் அடுத்த நாள் பெரிதாக்கலாம். அலுவலகம் என்று போய் வந்தால், பூசல்கள் கரைந்து போக வாய்ப்பிருக்கிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே ஆரோக்கியமான மன நிலை நீடிக்கிறது. சேர்ந்து இயங்க முடிகிறது.

நான்கு சுவற்றுக்குள் அடைக்கப்படும் பெண்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் கணவரே பூர்த்தி செய்ய வேண்டியவராகிவிடுகிறார். அது ஒரு ஆணுக்கு சுமக்க அதீதமான பலுவாகிவிடுகிறது.  மனைவியும் வேலைக்கு செல்லும் பட்சத்தில், அந்த பலு அவருக்கு இல்லை. வாழ்க்கை லேசாகலாம்.

சில பெண்கள் ஆரம்பித்தில் இருந்தே சார்ந்து வாழ பழகியிருக்க மாட்டர். தனித்து இயங்குகையில் தான் அவர்களது முழுத்திறமையும் வெளிப்படும் என்றிருக்கலாம். அப்படியிருப்பவர்களை துணையுடன் அதீதமாக சார்ந்து இருக்க வைப்பது ஒரு வித மன நோய்க்கு எளிதாக கொண்டு சென்றுவிடலாம்.

என்னேரமும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தால், நல்ல புரிதலும், காதலும் இல்லாத பட்சத்தில் நிச்சயம் சலிக்கும். வெறுப்பு வரலாம். வேலை, அலுவலகம் போன்றவைகள், இந்த சலிப்பை வராமல் தடுக்க வல்லது.

நேர்மையாக பதிய வேண்டுமெனில், பணியிடங்களில் பாலியல் தொந்திரவுகள், வேலைக்கு சென்றுவிடும் நேரத்தில் கணவரை புரிந்துகொள்ள முடியாமல் போய்விடுவது, அதீதமான வேலை பலுவால் உடல் நலம் குன்றுதல் போன்ற அசெளகர்யங்களும் நேர்கிறது தான். இந்த அசெளகர்யங்களுக்காகவும் பெண்கள் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்க பிரியப்படுவதும் நடக்கிறது.

பொதுவில் எதுவும் சொல்வதற்கில்லை.

ஆதலால் வாழ்க்கை என்கிற வார்த்தைக்கு பல விளக்கங்களை சொல்ல முடியும். தெரிய வராத உண்மைகளும், தெரிந்த பொய்களும் தான் வாழ்க்கை என்றும் கூட இப்போதெல்லாம் வாழ்க்கை என்கிற வார்த்தைக்கு விளக்கம் தரப்படுகிறது.

கணவனோ மனைவியோ, துணையை அப்படியே ஏற்றுக்கொள்வது உத்தமம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. அதில் எல்லாமும் அடங்கி இருக்கிறது.

அமேரிக்கத்தனம் - ஒரு பக்க கதை

$
0
0
அமேரிக்கத்தனம் -  ஒரு பக்க கதை


அமேரிக்காவின் டாலஸ் நகரில், ப்ளானோவில் அமைந்த அந்த மத்திம ரக தங்கும் விடுதியின் லிஃப்ட் கதவு திறக்க, அவள் வெளியே வந்தாள்.

அவள் அணிந்திருந்த உடைகளில், நீல நிற ஜீன்ஸும், கருப்பு நிறத்தில் மார்பை மறைக்க பிரயத்தனப்படும் டிசர்ட்டும் மட்டுமே எல்லோரு கண்களிலும் பட்டது, அவை இரண்டுமே அவள் உடலை இருக்கிப் பிடித்ததினால் இருக்கலாம் என்று மறைந்த ஃப்ராய்டு உயிரோடு இருந்திருந்தால் , தெள்ளத்தெளிவாக சொல்லியிருக்கக்கூடும்.

ரிசப்ஷனை அண்டிய அவள், பேசிய ஆங்கிலத்தில் தெளிவான அமேரிக்கத்தனம்.

தங்கியிருந்த அறையை காலி செய்கிறாள் என்று தோன்றியது. அவள் கையிலிருந்த கோச் கைப்பையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அமேரிக்காவில் , இந்த ப்ராண்ட் பை மிகப்பிரபலம். இந்த குறிப்பிட்ட கோச் கம்பெனி பைகளை கண்டால், கொள்ளையடிக்க முயற்சிக்கும் அமேரிக்கர்கள் அனேகம்.

சுண்டு விரலில் சுழற்றிக்கொண்டிருந்த சாவியை எடுத்து அவள் கிள்ள, கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பால், பார்க்கிங் ஏரியாவில் தரையோடு தரையாக படுத்திருந்த ஒரு பி.எம்.டபிள்யு அழகாக கண்சிமிட்டியது.

விடுதிக்கென பையிலிருந்து எடுத்து வழித்த பாங்க் ஆஃப் அமேரிக்கா வங்கியின் க்ரெடிட் கார்டு ஆகட்டும், அமேரிக்காவின் புகழ்பெற்ற சிக்சில்க் ரக மேல் துணியாகட்டும் , அணிந்திருந்த ஆக்லே ரக கண்ணாடியாகட்டும், ஜிம்மி சூ ரக பாதணியாகட்டும் அணைத்திலும் அமேரிக்கத்தனம்.

எல்லாவற்றையும் முடித்துவிட்டு, கண்ணாடி கதவுகளைக் கடந்து, போர்டிகோ தாண்டி, கண்சிமிட்டிய பி.எம்.டபிள்யுவின் கதவை அவள் திறந்து உள்ளே லாவகமாக அமர்ந்து, கால்களை உள்ளே இழுக்கையில் தான் அதை கவனித்தேன்.

வலது காலில் மட்டும் ஒரே ஒரு .......... கொலுசு...


 - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

இந்த வார குங்குமம் இதழில் என் குறுங்கதை

$
0
0
ஆங்கிலத்தில் Quick Fiction என்பார்கள்.
லவ் என்கிற தலைப்பில் காதலர் தினத்திற்கென நான் எழுதிய குறுங்கதையொன்று இந்த வார குங்குமம் இதழில் வெளியாகியிருக்கிறது.
பணி நிமித்தம் அமேரிக்காவில் இருப்பதால், நண்பர்கள் யாரேனும் இந்த இதழில் கதை வெளியான பக்கத்தை பிரதியெடுத்து அனுப்ப இயலுமா?




Viewing all 1140 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>